Ad Widget

யாழ் நகரில் அதிகரித்துச் செல்லும் பெண்கள் மீதான சேட்டை – மக்கள் விசனம்

யாழ் நகரப்பகுதிகளில் குறிப்பாக யாழ் கஸ்தூரியார் வீதி, பெருமாள் கோவில் வீதி கன்னாதிட்டி வீதி ஆகிய வீதிகளில் பயணிக்கும் பெண்களுடன் சிலர் தகாத வார்த்தைகளால் பேசி சேட்டை செய்வதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதிகளால் பயணிக்கும் தனியார் கல்வி நிலைய மணவிகள், மற்றும் தொழில் புரியும் யுவதிகளளாகியோரிடம் சிலர் தகாத வார்த்தைகளால் சேட்டை செய்வதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்களுடன் சேட்டை செய்வது வாலிபர்களை விட ஒரளவு வயதானவர்களே எனவும் இது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் சமுக ஆர்வலர்களும் பொது மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு சேட்டை செய்வர்களது புகைப்படங்களும் அடையாளங்களும் தம்மிடம் இருப்பதாகவும் தொடர்ந்து இவ்வாறான சேட்டைகளில் ஈடுபட்டால் புகைப்படங்களை பத்திரிகைகளிற்கும் பொலிஸாரிற்கும் கொடுப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts