- Saturday
- July 26th, 2025

யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றுள்ள இளைஞர் யுவதிகளின் புள்ளிவபரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது. இதன் படி மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளையோர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி கரவெட்டியிலும், 29 ஆம் திகதி சண்டிலிப்பாயிலும், 30 ஆம் திகதி காரைநகர் மற்றும் சங்கானையிலும் ஜூலை மாதம் 03 ஆம்...

புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகளும் அல்லர். அவர்களில் முதலீட்டாளர்கள், கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு - தமது அறிவு, புலமை, நீதி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய அவர்கள் விரும்புகின்றனர். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கையின் பிரகாரம் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கே.பிக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது'' எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த...

மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற எண்மர் கொலைகளுடன் தொடர்புடைய இராணுவத்தினர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை எங்ஙனம் சிறப்பாக இயங்குகின்றதென்பதற்கு இது சான்று பகர்கின்றதென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு இதேவிதத்தில்...

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அதியுயர் பாதுகாப்புடன் கூடிய இரண்டு பென்ஸ் கார்கள் உட்பட 27 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன'' - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் நேற்று அறிவித்தார். அத்துடன், 105 பொலிஸாரும், 104 முப்படையினரும் அவருக்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், தேர்தல் காலத்தில் மஹிந்தவுக்கு மேலும் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு...

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 7பேர் கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று மானிப்பாய் பொலிஸார் கிளிநொச்சியில் வைத்து நேற்று வியாழக்கிழமை (25) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 4 மோட்டார் சைக்கிள்கள், ஐ போன், கமரா, வாள், ஐ பாட், கைச்சங்கிலி...

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட ஆலயங்களில் இரவு வேளைகளில் இசைக் கச்சேரிகள் நடத்துவதற்கு பருத்தித்துறை மாவட்ட நீதவான் மா.கணேசராசா நேற்று வியாழக்கிழமை (25) உத்தரவிட்டார். ஆலயங்கள் அமைதியின் உறைவிடம் அங்கு அமைதியைக் குழப்பும் வகையில் கேளிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது. அத்துடன், இசைக்கச்சேரிகளின் போது கைகலப்புக்கள் ஏற்பட்டு குழப்பங்களும் இடம்பெறுகின்றன. இது ஆலயங்களுக்கு பொருத்தப்பாடில்லாத செயற்பாடு. இதனைக் கருத்திற்கொண்டு ஆலயங்களில்...

தமிழ் மக்களின் இருப்பை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்றது போல தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நடைபெறுகின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

காணமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அதில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு...

குப்பி விளக்கை மனைவி மீது எறிந்து அவர் உயிரிழக்க காரணமாக இருந்த காக்கைதீவுப் பகுதியைச் சேர்ந்த ஒருவரை வியாழக்கிழமை (25) கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காக்கைதீவைச் சேர்ந்த சிறிதரன் சாந்தினி (வயது 33) என்பவரே உயிரிழந்தார். சந்தேகநபர்கள் கடந்த 20ஆம் திகதி மனைவியுடன் சண்டையிட்டு மண்ணெண்ணெய்யுடன் கூடிய குப்பி விளக்கை மனைவி மீது...

தந்தையைக் கொலை செய்வேன் எனக்கூறி 20 வயதுடைய யுவதியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவமொன்று யாழ். பருத்தித்துறை, குடத்தனை மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (25) முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர் தலைமறைவாகி உள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். யுவதியின் அத்தானுடைய நண்பரான சந்தேநபர், மேற்படி யுவதியை அச்சுறுத்தி...

யாழ். தென்மராட்சி, வரணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் சிறுவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதே பாடசாலையைச் சேர்ந்த ஆண் ஆசிரியரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுமிகள் மூவரும், சிறுவர்கள் இருவருமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 12 ஆவது சந்தேக நபர் ஒருவர் நேற்று மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகினர். அவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர்...

புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1948 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக ஆலோசனை சேவைகள் வழங்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானத்தை ஒழிப்பதற்கான தேசிய அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். வார நாட்களில் அலுவலக நேரங்களில் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி...

கிளிநொச்சி பகுதியில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள புகையிரத பாதையை குறுக்கறுத்துச் செல்லும் வீதிகளுக்கு பாதுகாப்புக் கடவை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமுறிகண்டி முதல் ஆனையிறவு வரைக்குமான பகுதிகளில் ஏ-9 வீதியில் இருந்து புகையிரத வீதியை குறுக்கறுத்துச் செல்லும் குறிப்பிட்ட சில பாதைகள் தவிர சுமார் 23 பாதைகள் புகையிரத...

யாழ். மாவட்டத்தில் வாகனங்கள் மீது எந்த நேரத்திலும் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்வர் என்று யாழ். மாவட்ட உதவி போக்குவரத்து ஆணையாளர் கே.மதிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் வாகனங்களை கடுமையாகக் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்...

உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மீளக்குடியமர ஆயிரத்து 87 குடும்பங்கள் கிராம சேவையாளர்களிடம் பதிவு செய்துள்ளனர். வலி.வடக்குப் பிரதேசத்தில் மீளக்குடியமர 795 குடும்பங்களும், வலி.கிழக்குப் பிரதேசத்தில் மீளக்குடியமர 292 குடும்பங்களும் இவ்வாறு பதிவு செய்துள்ளன என தெல்லிப்பழை, கோப்பாய் பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன. தற்போது இப்பிரதேசங்களில் குடியேறிய 170...

பிரபல கல்லூரி மாணவர்கள் இருவருக்குக் கடும் நிபந்தனையில் பிணை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்கள் மீண்டும் குற்றம் செய்தால் மேல் நீதிமன்றத்தைக் கேட்காமலேயே பிணையை ரத்துச் செய்ய மல்லாகம் நீதிமன்றத்திற்கு விசேட அனுமதி அளித்துள்ளார். தெருவில் ரவுடித் தனத்தில் ஈடுபட்டு, மாணவிகளுக்குத் தொல்லைகொடுத்தனர், தனியார் கல்வி நிலையத்தை சேதப்படுத்தினர், என்ற குற்றச்சாட்டுக்களில் கைதானோருள்...

2000ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் 8 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி மிருசுவில்...

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விக்கினேஸ்வரன் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்காவில் நடைபெறவுள்ள கலாச்சார நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் சில அமெரிக்கா உயர்...

All posts loaded
No more posts