- Saturday
- July 26th, 2025

'அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்கள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த தேர்தல் முறைமை மாற்றத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பிரச்சினை வராது. இருப்பினும், அடுத்தடுத்த கட்டங்களில் உள்ள சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படும். இதனாலேயே 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்க்கின்றோம்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

கடத்தியதாக நாடகமாடி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள விருந்துனர் விடுதியில் இரு நாட்கள் தங்கியிருந்த வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 35 வயதுடைய இரு பெண்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, வியாழக்கிழமை (25) உத்தரவிட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தனர். கடந்த 22ஆம்...

கந்தரோடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்னால் நின்று பாடசாலை மாணவிகளை கைபேசியில் புகைப்படம் எடுத்த இருவரை வியாழக்கிழமை (25) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தனர். கைதான இருவரும் அளவெட்டி தெற்கு பகுதியினை 21, மற்றும் 23 வதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து...

கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிளியூர் ரமணன் உருவாக்கிய 'வித்தியா...

யாழ். மிருசுவிலில் 2000ஆம் ஆண்டில் 8 தமிழ் மக்களைப் படுகொலைசெய்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் சுனில் ரத்னாயக்கவுக்கு ஆதரவாக ருவிற்றரில் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளிலேயே 10 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 'போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்' என்ற பொருள்படும்...

மைத்திரி அணி - மஹிந்த அணி என இரண்டாகப் பிளவடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பதற்காக ஏற்கனவே ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியை ஒற்றுமைப்படுத்தி பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எட்டுபேர் அடங்கிய மற்றுமொரு குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் உள்ள வீடுகளற்ற குடும்பங்களிற்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஆரம்பகட்ட நிகழ்வு அண்மையில் (24) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திரியபியச வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் இம்முறை யாழ் மாவட்டத்தில் உள்ள வீடுகளற்ற 300 பயனாளிகள் தெரிவு...

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் நேற்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா ஆகியோரும் பங்கேற்றனர்.

கடல் வழியே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த 78 இலங்கையர்கள் கிரிந்தவில் இருந்து 65 மைல் கடல் தொலைவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் இந்திக சில்வா தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 59 தமிழர்களும் 17 சிங்களவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் காலி துறைமுகத்திற்கு...

ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜூலை 6ம் திகதி தொடக்கம் 15ம் திகதிவரை கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னரான புதிய பாராளுமன்றம் செப்டெம்பர் 1ம் திகதி கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போரினாலும் இன வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை துரிதமாக வழங்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாத நிலையில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் நிர்வாகத்திலுள்ள புனர்வாழ்வு அதிகாரசபையில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகின்றது. புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானத்தின்படி அந்தக் கோப்புகளை மீளாய்வு...

முல்லைத்தீவு விநாயகபுரத்தில் 22.7 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நேற்று வியாழக்கிழமை (25.06.2015) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் திறந்து வைத்து, அதனை இத்திட்டத்தின் பயனாளிகளான விநாயகபுரம் விவசாயிகளிடம் கையளித்துள்ளார். போரினால் இடம்பெயர்ந்த விநாயகபுரம் மக்கள் மீளக்குடியேறியதன் பின்னர் நீர்ப்பாசன வசதிகள்...

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்தார். மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த அவரை அமைச்சர் சம்பிக்க ரணவக்க விமான நிலையத்தில் வரவேற்றார். இந்த பயணத்தின்போது இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரையும்...

கோப்பாய் கொலை வழக்கில் பிணையில் சென்ற முதலாவது எதிரியும் நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினாராம்!
கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை வழக்கொன்றில் பிரதான எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர், அண்மையில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலில் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்துச் செய்வதற்கு மேல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு கோப்பாய் பிரதேசத்தில் இரத்தினம்...

முல்லைத்தீவு விசுவமடு ஏ-35 வீதியில் வெள்ளிக்கிழமை (26) காலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை இராணுவ ஜீப் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு விசுவமடுவைச் சேர்ந்த செல்லையா பரராஜசேகரம் (வயது 70) என்பவரே படுகாயமடைந்தார். புதுக்குடியிருப்பிலிருந்து விசுவமடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் 12ஆம் கட்டையை...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இருவருக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்திப்பு இடம்பெற்றதாக வெளியான செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இணையவழிக் குற்றங்களில் ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். சமூக, கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தும் இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதுடன், சமூக, கலாசார சீரழிவுகளுக்கு இடம் கொடுக்கும் நெற்கபே தடை செய்யப்பட்டு உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சைபர் குற்றச் சட்டம் உடனடியாக யாழில் அமுல் படுத்தப்பட்டு,...

இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு யாழ். போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னாரைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதேவேளை, இந்நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 9 சிறுவர்கள், 6 கர்ப்பிணிகள் உட்பட 20 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்தார். மேலும்...

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (U.N.D.P) industrial Service Bureau (ISB) உடன் இணைந்து யாழ் மாவட்ட இளையோருக்கான முயற்சியாண்மை நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. இளையோர் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கிலும் அவர்கள் சார்ந்த சுயதொழிலை ஆரம்பிக்க ஊக்குவிக்கும் நோக்கிலும் மேற்படி செயற்றிட்டம் நாடுமுழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள வேலனை, கரவெட்டி, பருத்தித்துறை,...

கிளிநொச்சி, உருத்திரபுரம் எள்ளுக்காடு பிரதேசத்தில் காணாமல் போன மூன்று வயது குழந்தை உதயகுமார் யர்சிகா பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில் அவரைத் தேடும் வேட்டை நேற்று தென்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று காலை முதல் களுத்துறைப் பகுதியில் குழந்தையைத் தேடி பூரண தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும்,...

All posts loaded
No more posts