Ad Widget

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் 25ஆம் திகதி வெளியிடப்படும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25ஆம் திகதி மருதனார் மடத்தில் இடம்பெறும் பரப்புரைக் கூட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் கடந்த சில வாரங்களாக ஈடுபட்டு வந்தது.தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கும் பணிகள் நேற்றிரவுடன் முடிவுக்கு வந்தன.

இந்த நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி பி.ப 3 மணிக்கு மருதனார்மடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பரப்புரைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.அந்தக் கூட்டத்தில் வைத்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை முதலாவது பரப்புரைக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,மற்றும் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts