Ad Widget

யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரைக் காணவில்லை!

மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞரை‍க் காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக, யாழ். பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

யாழ். நாவற்குழி 300 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் யூட் றொசான் (வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த மாதம் 15ம் திகதி தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு ஊசி போடுவதற்காக பெற்றோருடன் சென்ற நபர், பின்னர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு அண்மையில் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றுள்ளார்.

அப்போது போனவர் எங்கு போனவர் என்று தெரியவில்லை என இளைஞரின் அப்பம்மா யாழ். பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts