Ad Widget

முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு; இருவர் கைது

யாழ்ப்பாணம் திருநகர் பரராஜசிங்கம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை பெற்றோல் ஊற்றி எரித்த குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை(31) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி, செவ்வாய்க்கிழமை(31) அதிகாலை பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில்...

பீடாதிபதியின் உறுதிமொழியையடுத்து தடுத்துவைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் விடுவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக நுண்கலைப்பீட வளாகத்துக்குள் தடுத்துவைக்கப்பட்ட விரிவுரையாளர்களை, அங்கு சென்ற கலைப் பீடாதிபதி வி.பி.சிவநாதன் உறுதிமொழி வழங்கி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லை, ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும்...
Ad Widget

பாடசாலை குடிநீரில் விஷம் கலந்தமை தொடர்பில் புலனாய்வு

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய குடிநீர் தாங்கியில் விஷம் கலந்த சம்பவம தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தண்ணீர் தாங்கியில் கிருமி நாசினி கலந்தமை...

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை

யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார். செவ்வாய்க்கிழமை (31) மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில்...

19க்கு ஆதரவாக த.தே.கூ தலையீட்டு மனு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், நேற்று செவ்வாய்க்கிழமை (31) உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, சுமந்திரன் எம்.பி.யினால் மேற்படி திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது...

எச்சரிக்கை; பிரச்சினையை தீர்க்காவிடில் பதவிகளுக்கு ஆபத்து வரும்

மணல் மற்றும் மரம் கடத்தல், களவு ஆகிய விடயங்களில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அதிக சிரத்தை எடுத்து செயற்பட வேண்டும். எதிர் வரும் 30 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்குகின்றேன். இதற்குள் இந்த விடயங்கள் தொடர்பில் சீரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீங்கள் இங்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள் என்றே எண்ணுகின்றேன்....

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் காப்பது அவசியம் – மனோ

புதிய தேர்தல் முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகை 250 ஆக அதிகரிக்கப்படுமானால், மத்திய, மேல், ஊவா மாகாணங்களில் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் கலந்து வாழும் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தில் 5, கொழும்பில் 3, பதுளையிலும், கண்டியிலும் தலா 2 என்ற குறைந்தபட்ச எண்ணிக்கையில் தமிழ்...

இராணுவத்தைக் குறைக்காது மீள்குடியமர்வு சாத்தியமாகாது – த.தே.கூ

இராணுவக் குறைப்பில் புதிய அரசு அக்கறை செலுத்தாத வரையில், தமிழ் மக்களின் மீள்குடியமர்வு முழுமையாகச் சாத்தியமில்லை என்று அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள், யாழ்ப்பாணத்திற்கு நேற்றுமுன் தினம் வந்திருந்தனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் அவர்கள் சந்திப்பை மேற்கொண்டிருந்தனர். பின்னர்...

கூட்டமைப்பின் இராஜதந்திரத்துக்கு என்ன வெற்றி கிடைத்தது? – கேள்வி எழுப்புகிறார் கஜேந்திரகுமார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர செயற்பாடுகளால் கடந்த 5 வருடங்களில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றி என்ன என்பதை அவர்கள், மக்களிடம் கூறவேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'அண்மையில்...

ஹோமாகம – தலைமன்னார் நகரங்களுக்கு புதிய ரயில் சேவை

ஹோமாகம மற்றும் தலைமன்னார் ஆகிய நகரங்களுக்கான புதிய ரயில் சேவைகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளன. ஹோமாகம- கொழும்பு கோட்டை மற்றும் கொழும்பு கோட்டை முதல் தலைமன்னார் வரையில் இச்சேவைகள் நடைபெறவுள்ளன. இதற்கமைய காலை 7.00 மணிக்கு ஹோமாகம தொடக்கம் கோட்டை ரயில் நிலையம் வரையிலும் மாலை 7.00 கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து தலைமன்னார் வரையிலும்...

மஹிந்த கூட்டத்தால் நாடு பாதாளத்தில் – சந்திரிகா

போரை வெற்றி கொண்டதாகத் தம்பட்டமடித்த முன்னைய அரசு அதன் பலாபயனை மக்களுக்குப் பெற்றுத்தரவில்லை. நாட்டை பெரும் கடனில் மூழ்கடித்துச் சென்றுள்ளது இவ்வாறு குற்றஞ்சாட்டினார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. "போர் நிறைவுபெற்று ஆறு ஆண்டுகளின் பின்னர் தேர்தல் தோல்வியையடுத்து வீடு சென்ற முன்னைய ஆட்சியாளர்கள் திறைசேரியை வங்குரோத்து நிலையில் விட்டுச்சென்றுள்ளனர். அத்துடன் நாட்டைப் பத்தாயிரம்...

கோடரியால் வெட்டப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்!

பளை வேம்பொடுகேணிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கோடரி வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் கோடரி வெட்டு இடம்பெற்றதாகவும், அதன்போது இதே இடத்தைச் சேர்ந்த ஜெயராஜா சிவநேசன் (வயது-38) என்பவர் படுகாயமடைந்து பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக...

வடக்கு வரும் ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் முதலமைச்சர், மன்னார் ஆயருடன் முக்கிய பேச்சு

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை வடக்கிற்கு வருகின்றார். அவர் இங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலருடன் வடக்கின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்....

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வு செயற்றிட்டத்தின்கீழ் தொடர்ந்தும் இயங்கும்!

தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் தொடர்ந்து இணைந்து செயற்படும். இதற்கென புதிய புரிந்துணர்வு செயற்றிட்டம் ஒன்றை உருவாக்கி அதன் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் அந்தக் கட்சியின் பேச்சாளர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதில் உள்ள நெருக்கடிகள், அடுத்தகட்டச் செயற்பாடுகள் குறித்து...

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம்

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோர், இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இதுவரைகாலமும் கடமையாற்றிய இ.ரவீந்திரன், கல்வி அமைச்சின் செயலாளராகவும் கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன், மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும் மீன்பிடி அமைச்சின் செயலாளராக...

ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பில் மேலும் 3 பேர் கைது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். கைது செய்யப்பட்டோர்களில் ஒருவர் இலங்கை கடற்படை அதிகாரி என்று கூறிய போலிஸ் ஊடக...

பாடசாலை கிணற்றுக்குள் வாளை போட்டவருக்கு விளக்கமறியல்

சுன்னாகம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை கிணற்றுக்குள் வாளொன்றைப் போட்ட சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்கரன் செவ்வாய்க்கிழமை (31) உத்தரவிட்டார். மேற்படி பாடசாலை கிணற்றிலிருந்து 4 ½ அடி நீளமான வாள் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. வாள்...

மாணவியை துன்புறுத்திய அதிபர், ஆசிரியரிடம் விசாரணை

சிறுப்பிட்டியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 5 மாணவியொருவரை அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஒருவரிடம் செவ்வாய்க்கிழமை (31) விசாரணை நடத்தியதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை ஆசிரியர் ஒருவர் தினந்தோறும் தன்னை அடித்துத் துன்புறுத்துவதால் தான் இனிமேல் பாடசாலைக்குச் செல்லமாட்டேன் என அம்மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்...

நுண்கலைப்பீட மாணவர்கள் மீண்டும் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை (31) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர்ந்தும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் கூறினர். மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக...

மஹிந்த மாளிகை அமைத்தபோது தமிழர்கள் பொறுமை காத்ததே பெரிய விடயம்! – சிங்களவர்களாக இருந்தால் விரட்டியிருப்பார்கள் என்கிறார் பிரதமர்

சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் அரச மாளிகை அமைத்திருந்தால் அந்த மக்கள் எம்மை நாட்டிலிருந்து விரட்டியிருப்பார்கள். ஆனால், யாழில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 200 ஏக்கர் காணியில் கோடிக்கணக்கான செலவில் அரச மாளிகை அமைத்தபோதும் தமிழ் மக்கள் இன்றுவரை பொறுமையாக இருந்ததே பெரிய விடயம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தமது...
Loading posts...

All posts loaded

No more posts