Ad Widget

குடாநாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின்போது யாழ்.குடாநாட்டில் பாதுகாப்பினைப் பலப்படுத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எவ்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

அரசியல் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகள், வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்காக இப்போதிருந்தே விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்.குடாநாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் ஊடாக இரவு பகல் வேளைகளில் வழமையாக நடைபெறும் ரோந்து நடவடிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். சட்டத்தினை மீறுபவர்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகள் தற்போது முழு வீச்சில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. என்றார்.

Related Posts