Ad Widget

எம்.பி.யின் வாகனத்தில் மோதுண்ட முதியவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பேச்சியம்மன் கோயிலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் மரணமடைந்து விட்டதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (வயது 62) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா பயணம்...

இன்று பெரிய வியாழன்

யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில் கல்வாரித் திருவிழா புனித வார நிகழ்வுகளாகப் பெரிய வியாழன்,பெரிய வெள்ளி, பெரிய சனி,உயிர்ப்பு ஞாயிறு,தியான திருச்சிலுவை வழிபாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இன்று பெரிய வியாழக்கிழமை மாலை 5மணிக்கு திருப்பலி, பாதம் கழுவுதல்,தேவ நற்கருணைப் பவனி, எழுந்தேற்றம் என்பன நிகழவுள்ளன. நாளை பெரிய வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு வார்த்தை வழிபாடு,திருச்சிலுவைஆராதனை என்பன...
Ad Widget

தமிழர்களுக்கு இழைத்த அநீதியால் கொடூர ஆட்சி செய்த மகிந்த அரசு வீடு சென்றது – சம்பந்தன்

மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். மகிந்த அரசின் கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர் உறவுகளைத் தொலைத்தனர், உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற...

50 கிலோ சீமெந்து மூடை 870 ரூபா! வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக...

உங்கள் உறவுகளும் யேமனில் சிக்கியுள்ளனரா? உடன் அழைக்கவும்!

யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதனால் யேமனில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்து தகவல்களை 0112323015 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி வழங்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. யேமனில் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் விமான நிலையங்கள் மூடப்பட்டு நாட்டில் குழப்ப நிலை தோன்றியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்கி- விக்கிரமசிங்க பனிப்போர் முடிவுக்கு வரவேண்டும் – மனோ

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதல்வர் சி. வி. விக்னேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய...

தலைக்கவச விவகாரம்: மே வரை ஒத்திவைப்பு

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணியும் சட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து அந்த தடைச்சட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சட்டம் கடந்த மார்ச் 21ஆம் திகதி அமுல்படுத்தப்படவிருந்த நிலையில், பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால், பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அத்திட்டத்தை...

உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, சிகிரியாவிலுள்ள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் புதன் கிழமை இரவு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து...

“இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு” அமைக்கப்படல் வேண்டும் ஈ.பி.டி.பி. முன்மொழிவு!

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள 11 ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக, இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு" ஒன்று அமைக்கப்பட வேண்டும். இன, மத முரண்பாடுகளை வளர்ப்போர் மீது விசாரணை செய்து, சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளதாக இருத்தல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்மொழிந்துள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள 19வது அரசியல் அமைப்புச்...

கூட்டமைப்பு உள்முரண்பாடுகளிற்கு தீர்வு!

நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் இரண்டு விடயங்களில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. இதில் முதலாவதாக ஒரு யாப்பின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்க வேண்டும் என்றும், அதற்கான...

வடக்கு அமைச்சுக்களின் செயலாளர் இடமாற்றம் தீடீர் ரத்து!

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோருக்கு இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட இடமாற்றம் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் உத்தரவுக்கமைய இடைநிறுத்தப்பட்டுள்ளது. வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும், மீன்பிடி அமைச்சின் செயலாளராக...

வடக்கு மாகாண முதல்வரைச் சந்தித்தார் ஐ.நா. சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்!

பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை கொண்டுள்ள முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டு இங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வந்த அவர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது வடக்கில்...

போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் விசேட அதிரடி படையினர்

வடமாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பொலிஸார், விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைந்து செயற்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில், யாழில் போதைபொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருட்கள், போதையூட்டப்பட்ட பாக்கு என்பன...

கணவன், மனைவி இருவருக்கும் முதியோர் கொடுப்பனவு

சமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை கணவன், மனைவி இருவரும் பெறுவதற்கான புதிய சுற்றுநிரூபத்தை அமைச்சின் செயலாளர் டீ.கே.றேணுகா ஹேரத் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 70 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், சமூக சேவை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. 2012ஆம்...

பிரதமர் வருகையால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா?, ஆயரிடம் கேள்வி எமுப்பினார் ஜேர்மன் தூதுவர்

யாழ்.வருகை தந்த ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோர்கான் மூர் காட்டுக்கும் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகைக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று காலை 10மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. மேலும் குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்.ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜேர்மன் தூதுவர் யாழ்ப்பாணம் வந்ததன் நோக்கம் இங்குள்ள நிலமைகளை...

முச்சக்கரவண்டி தீயிட்டு எரிப்பு; இருவர் கைது

யாழ்ப்பாணம் திருநகர் பரராஜசிங்கம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை பெற்றோல் ஊற்றி எரித்த குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை(31) கைது செய்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான முச்சக்கரவண்டி, செவ்வாய்க்கிழமை(31) அதிகாலை பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில்...

பீடாதிபதியின் உறுதிமொழியையடுத்து தடுத்துவைக்கப்பட்ட விரிவுரையாளர்கள் விடுவிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக நுண்கலைப்பீட வளாகத்துக்குள் தடுத்துவைக்கப்பட்ட விரிவுரையாளர்களை, அங்கு சென்ற கலைப் பீடாதிபதி வி.பி.சிவநாதன் உறுதிமொழி வழங்கி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லை, ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும்...

பாடசாலை குடிநீரில் விஷம் கலந்தமை தொடர்பில் புலனாய்வு

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய குடிநீர் தாங்கியில் விஷம் கலந்த சம்பவம தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை(31) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தண்ணீர் தாங்கியில் கிருமி நாசினி கலந்தமை...

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை

யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால், யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார். செவ்வாய்க்கிழமை (31) மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில்...

19க்கு ஆதரவாக த.தே.கூ தலையீட்டு மனு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், நேற்று செவ்வாய்க்கிழமை (31) உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, சுமந்திரன் எம்.பி.யினால் மேற்படி திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது...
Loading posts...

All posts loaded

No more posts