Ad Widget

இணையம் ஊடாக செய்யப்படும் தேர்தல் பரப்புரைகளை தடுக்க முடியாது – தேர்தல் திணைக்களம்

இணையம் ஊடாக செய்யப்படும் தேர்தல் பரப்புரைகளை தடுக்க முடியாது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதியுடன் அனைத்து தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமானது.

எனினும் இணைய சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரப்புரைகளை தடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முகநூல் மற்றும் டுவிட்டர் மூலமான பரப்புரைகளை தடுத்து நிறுத்த சாத்தியமில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts