Ad Widget

பிரேமதாஸ மைதான வன்முறை: நால்வர் கைது

கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரையில் நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இடம்பெற்ற இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போதே இரசிகர்கள் குழுக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

போட்டி இடம்பெற்றுகொண்டிருந்த போது எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல்லொன்று விழுந்ததையடுத்தே இரசிகர்கள் குழுக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவும் அடித்து சேதமாக்கப்பட்டன.

இரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி 135 ஒட்டங்களால் படுதோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts