Ad Widget

சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட தானே காரணம் என்கிறார் மஹிந்த!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மைத்துர் எம்.கே.சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட தானே காரணம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ. ரத்கமவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மைத்துனரான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடும் சூழலை எனது அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுத்தது.

அத்துடன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும் தமது அரசாங்கமே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கமும், மஹிந்தவும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர் என்பது தெரிந்ததே.

Related Posts