ஐ.நா.விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடக் கோரி பல்கலை. சமூகத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்று மாபெரும் பேரணி!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு வலியுறுத்தியும், இறுதிப் போரில் அரச படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,...

ஏனைய கடமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பேரணிக்கு ஆதரவு வழங்குங்கள்; த.தே.கூ

ஐ.நா சபையின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரி பல்கலைக்கழக சமூகத்தினால் மேற்கொள்ளவுள்ள மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா சபையில் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட இருந்தநிலையில் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. எனவே விசாரணை அறிக்கையை...
Ad Widget

நியாயமான எமது போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுங்கள் – பல்கலைக்கழக சமூகம்

ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டு ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து இணைந்து கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. பேரணி தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கும் கலந்துரையாடல் நேற்று யாழ்....

வெகுஜன போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க தமிழ் சிவில் சமூக அமைப்பு தீர்மானம்!

யாழ்.பல்கலைகழக சமூகத்தின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ் சிவில் சமூக அமைப்பு, நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் கையெழுத்துப் போராட்டம் ஒன்றையும் நடதத் தீர்மானித்துள்ளது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் அமைந்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பிலேயே மேற்படி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...

பாலச்சந்திரனின் மரணம்: தமக்கு எதுவும் தெரியாதாம்! புலிகளே கொன்றிருக்கலாமாம்!! – பொன்சேகா

சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன் தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும்...

காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? யாழில் போராட்டம்

காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் “காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?“ “உலகே உனக்கு கண்ணில்லையா?“ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் போராட்டத்தில் வடமாகாண...

சரத்பொன்சேகா மீது காட்டப்பட்ட பொது மன்னிப்பு அணுகுமுறையை ஏன் தமிழ் இளைஞர்கள் மீது காட்டக்கூடாது – சந்திரகுமார் எம்பி

அண்மையில் ஜனாதிபதி அவர்களினால் பொது மன்னிப்பு என்ற அடிப்படையில் நாட்டின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். அவரிடமிருந்து மீளப்பெறப்பட்ட பதவி நிலைகளெல்லாம் மீண்டும் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, பிரதம நீதியரசர் அவர்களுக்கும் அவருடைய பதவி நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த அணுகுமுறையை ஏன், எங்களது தமிழ்...

போர்க்குற்ற அறிக்கையை வலுப்படுத்த ஐ.நா. மனிதஉரிமைகள் உப மாநாடுகளில் பங்குபற்ற கூட்டமைப்பு முடிவு!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை அறிக்கையை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்காமல் செப்டெம்பர் மாத அமர்வு வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் ஒத்திவைத்துள்ள நிலையில், அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம்...

ரயில் மோதி மாணவன் காயம்! நீராவியடியில் சம்பவம்!

சில மணிநேரங்களுக்கு முன்பாக ரயில் மோதி யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (19) 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக தனது இல்லத்தின் சோடனைகளை முடித்துக் கொண்டு, தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சமயமே இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சுன்னாகம் புகையிரத நிலையத்திலிருந்து...

மார்ச் மாதமே அறிக்கையை வெளியிடவும்; வடக்கு முதல்வர்

இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான அறிக்கை காலம் தாழ்த்தாமல் எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருந்தது. எனினும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை பிற்போடுமாறு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பாணை உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை உத்தரவுகளை பிறப்பிக்க பதிவாளருக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை...

இராணுவத்தினர் தங்களை முகாம்களுக்குள் முடக்கிக்கொள்ளவேண்டும் மீள்குடியேற்ற அமைச்சர் !

இராணுவத்தினர் தங்களை முகாம்களுக்குள் முடக்கிக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.வடபகுதியில் இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக் 25 ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை எவ்வாறு மக்களிடம் மீள கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக 25 வடபகுதிக்கு செல்கிறேன், தற்போது இராணுவத்திடம்...

ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டது முழுமையான ஏமாற்றமல்ல ; புதியதொரு ஒளிக்கீற்று என்கிறார் சுமந்திரன்

ஐ.நா அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள்  இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் .   இலங்கையின் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட...

சுமந்திரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் காட்டம்

போர் குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவு என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாக கூறப்படும் கருத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐ.நா.விசாரணையாளர்களின் விசாரணைக்காலத்தை நீடித்து நாட்டுக்குள் வந்து விசாரணை செய்ய அனுமதித்தால் ஐ.நா.விசாரணை அறிக்கையை வெளியிடும் காலத்தை நீடிக்கலாம் எனவும், ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் மேற்பார்வையின்...

ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவு தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை -சம்பந்தன்

இலங்கையின் போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்டம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐநா மனித உரிமைகள் ஆணையர் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் இந்த முடிவு தமக்கு கவலையையோ அல்லது மகிழ்ச்சியையோ அளிக்கவில்லை என்று...

சுதந்திர தினத்தில் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது!! – சம்பந்தன்

"இரத்தம் சிந்தி, சத்தியாக்கிரகம் இருந்து இழந்து - அழிந்து போன ஒரு சமூகத்திற்காக உருவானது தான் இந்த மாகாண சபை. எனவே, கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவியை வகிக்க எமக்கு உரிமை இல்லையா?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். "கிழக்கு மாகாணத்திற்கு...

ஐ.நா. விசாரணை அறிக்கை செப்ரெம்பர் வரை ஒத்திவைப்பு!

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த தமது அறிக்கையை மேலும் 6 மாதத்துக்கு, அதாவது செப்ரெம்பர் 2015 வரை ஒத்திவைப்பதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரின் பரிந்துரைக்கு மனித உரிமைக் கவுன்ஸில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஒரு முறை மட்டுமே தாம் இதனை ஒத்திவைப்பதாக அவர் வலியுறுத்தினார். இலங்கையில்...

முன்னர் இருந்தவர்கள் இணக்க அரசியலுக்குக்குக் கொடுத்த வியாக்கியானத்தை நாங்கள் கூற முன்வரவில்லை. -விக்கி

இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.       வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை டக்ளஸ் தேவானந்தா புறக்கணித்தார்.

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை  முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா  புறக்கணித்திருந்தார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். எனினும் கரு ஜெசூரியவை அழைத்து வந்த டக்ளஸ் தேவானந்தா நூலக...

தனக்கு அச்சுறுத்தல் என்று பிரதி அமைச்சர் விஜயகலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

தன்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சிலர் "உயிருடன் இருக்க விருப்பம் இல்லையா" என்று மிரட்டினர் என்று தெரிவித்து மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாட்டைப் பதிவுசெய்துள்ளார். நேற்றிரவு சில அநாமதேய தொலைபேசி இலக்கங்களில் இருந்து தனக்கு அழைப்புக்கள் வந்தன என்றும், அதில் பேசியவர்கள், தான் தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி,...
Loading posts...

All posts loaded

No more posts