Ad Widget

இராணுவத்தினர் தங்களை முகாம்களுக்குள் முடக்கிக்கொள்ளவேண்டும் மீள்குடியேற்ற அமைச்சர் !

இராணுவத்தினர் தங்களை முகாம்களுக்குள் முடக்கிக்கொள்ளவேண்டும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.வடபகுதியில் இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக் 25 ம் திகதி யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களை எவ்வாறு மக்களிடம் மீள கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக 25 வடபகுதிக்கு செல்கிறேன்,
தற்போது இராணுவத்திடம் உள்ள தனியார் நிலங்களில் அது பயன்படுத்தாமல் வைத்திருக்கின்ற நிலங்கள் எவை என நாங்கள் ஆராயவேண்டும்,இவ்வாறான நிலங்களை,உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் உறுதிப்படுத்திய பின்னர் அவர்களிடம் கையளிக்கலாம்,இது பாதுகாப்பை வழங்குவது என்ற இராணுவத்தின் அடிப்படை நடவடிக்கையை பாதிக்காது.
இராணுவம் அந்த பகுதிக்கு பாதுகாப்பளிப்பதற்காகவே அங்குள்ளது,இராணுவம் தன்னை முகாம்களுக்குள் முடக்கிக்கொண்டு சிவில் நிர்வாகத்தை சிவில் நிர்வாகத்திடமும், பொலிஸாரிடமும் விட்டுவிடவேண்டும், நிர்வாக விடயங்களல் தலையிடவேண்டாம் என உயர்அதிகாரிகள் உத்தரவை வழங்கவேண்டும்.
மக்களின் நாளாந்த வாழ்வில் அவர்கள் தலையிடாதவரை அவர்கள் இராணுவத்தை பிரச்சினையாக கருத மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts