Ad Widget

விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை டக்ளஸ் தேவானந்தா புறக்கணித்தார்.

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை  முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா  புறக்கணித்திருந்தார்.

வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார்.

எனினும் கரு ஜெசூரியவை அழைத்து வந்த டக்ளஸ் தேவானந்தா நூலக கேட்போர் கூடத்தில் விட்டுவிட்டு கூட்ட அறையை விட்டு வெளியேறினார்.   குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர் கருஜயசூரிய அழைப்பு விடுத்திருந்தார்.

அழைப்பு கடிதம் காலதாமதமாக கிடைக்கப் பெற்ற காரணத்தினாலும், தம்மால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியாமல் போகும் என்பதை அமைச்சர் கருஜயசூரியவிற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெளிவுபடுத்தி அமைச்சர் பங்கெடுக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாததையும் தெரியப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்தும் ஈ.பி.டி.பி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts