- Monday
- April 29th, 2024
சிரியாவில் இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாகக் கூறி பாலஸ்தீனியர் ஒருவரை, 10 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த முகமது சயீது இஸ்மாயில் முசாலாம் என்ற 19 வயதான இளைஞர், கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சுற்றுலா செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு ஐஎஸ் தீவிரவாத...
விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியொருவர் நேற்றுக் காலை புதுக்குடியிருப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே முன்னாள் பெண்போராளியான கைவேலி பகுதியைச் சேர்ந்த பெண்ணையே கடத்திச் சென்றுள்ளனர். தற்போது சிவில் பாதுகாப்பு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள அவர் படையினரின் கண்காணிப்பில் இயக்கப்படும் சிறார்களிற்கான முன்பள்ளியொன்றில் கல்வி கற்பித்து வந்தார். நேற்றுக்காலை வழமை போலவே முன்பள்ளிக்கு...
தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் பவளவிழா நேற்று புதன்கிழமை மாலை யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி பீற்றோ மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பேராயரின் சகோதரன் அருட்பணி சு.மனோபவன் தலைமையில் அகவை வழிபாடு இடம்பெற்றது. இதில் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வண. கலாநிதி இராயப்பு யோசப் அருளுரை...
யாழ்ப்பாணம், மணிக்கூட்டு வீதியின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்காரக் கட்டுக்களை உடைத்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் இன்று வியாழக்கிழமை (12) தெரிவித்தார். மணிக்கூட்டு கோபுர வீதியின் அழகுக்காக வீதியின் நடுவில் கட்டப்பட்டு இருந்த கட்டுக்களும் பூந்தொட்டிகளும் தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் யாழ்.மாநகர சபையால் நிர்மாணக்கப்பட்டு மின்விளக்குகளும்...
பாலேந்திரன் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்திலிருந்து நீதிமன்றத்தினூடாக விடுவிப்பதற்கு அவரது தாயார் ஜெயக்குமாரி கிளிநொச்சிக்கு வருகைதர வேண்டும் என கண்டாவளை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரி கூறினார். விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவிப்பதற்கு கிளிநொச்சி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (12) மனுத்தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்பட்டமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில்...
மலக்கழிவுகளை எரிக்கும் இயந்திரம் ஒன்றினை தாம் உருவாக்கி வருவதாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர் எஸ். பிரணவநாதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாநகர சபை எல்லைக்குள் இருந்து அகற்றும் மலக்கழிவுகள் கடந்த காலங்களில் கல்லுண்டாய் வெளியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது கல்லுண்டாய் வெளியில் கொட்டுவதற்கு குறித்த பகுதி மக்கள் எதிர்ப்புத்...
என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். சீனாவை தேவையற்ற விதத்தில் உள்நாட்டு அரசியலுக்குள் இழுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த நாட்டுக்கு அநீதியான விதத்தில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'சௌத் சீனா மோர்னிங் போஸ்டி'ற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு மஹிந்த...
நடிகர் சங்க தலைவர் தேர்தலில், சரத்குமாருக்கு எதிராக, இளைய தலைமுறை நடிகர்கள் சார்பில், நடிகர் சிவக்குமாரை போட்டியிட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள குணச்சித்திர நடிகர் ஒருவரின் வீட்டில், இளைய நடிகர்கள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர் என, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் மே மாதம்...
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 86 பேரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக செயலகம் அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்று இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என...
தமிழ்த் தேசிய இனம் ஒரு நாட்டுக்குள் தனித்துவமான தேசம் என்னும் அடிப்படையில் ஆக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வை பெறுவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வழிசமைக்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு புதன்கிழமை (11) விஜயம் மேற்கொண்டிருந்த மன்னார் ஆஜரிடம், மோடியின் இலங்கை...
வடக்கு, தெற்கு இடைவெளியைக் குறைப்பதற்கு, புதிய அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தியுள்ளார் அமெரிக்காவின் பிரதித் தூதுவர். வடக்கு மாகாணத்திற்கு நேற்று வந்திருந்த அமெரிக்காவின் பிரதித் தூதுவர் அன்ரூ சி மென் தலைமையிலான குழுவினர், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக் னேஸ்வரன், ஆளுநர் மற்றும் இராணுவத்...
மகாதேவா ஆச்சிரமத்தின் சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்கும் விபூசிகாவை அவரின் தாயான ஜெயக்குமாரியிடம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மனுவை தாயாரான ஜெயக்குமாரியின் சார்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் 7 சட்டத்தரணிகள் தாக்கல் செய்யவுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இணைவதற்கு நடவடிக்கை எடுத்தார் எனக் கூறப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட கோபிக்கு புகலிடம்...
காலி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை விவகாரம் தொடர்பில் தேசிய நிறைவேற்று அதிகார சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமையவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதில் பெரும் மோசடிகள் இடம்பெற்றன எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 'அவன்ற் கார்டே' நிறுவனத்தின் இந்த ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கு முடியும்வரை, கோட்டாபய...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண வருகையிட்டு வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் - கீரிமலை வீதியின் இரு மருங்கிலும் உள்ள பற்றைகள் வெட்டி அகற்றப்படுவதுடன், கீரிமலையில் இருந்து சேந்தான்குளம் செல்லும் வீதியில் சில பகுதி கற்கள் போடப்பட்டு துப்பரவு செய்யப்படுகின்றன. இந்தியப் பிரதமர் 14ஆம் திகதி கீரிமலைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின்...
இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் விருப்ப வாக்கு நடைமுறை காரணமாக, தேர்தல்களில் பல்வேறு சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, கட்சிகளுக்கு உள்ளேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன அதன் காரணமாக தேர்தல் நடைமுறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனும் பொதுவான கருத்து...
பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்று (11) இரவு சுமார் 8.20 அளவில் இவ்வாறு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று முன்தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பாரியாரும் இச்சந்திப்பின் போது கலந்து கொண்டுள்ளார். மேலும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவையும் ஜனாதிபதி சந்தித்தார். இதன்போது வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மாகாண...
கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக, இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்துள்ளார்கள். யுத்த அகதிகளாகவும் அரசியல் அகதிகளாகவும் இடம்பெயர்ந்த நாம் வருங்காலத்தில் சூழலியல் அகதிகளாகவும் இடம் பெயர வேண்டிய அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று வடக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு...
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் 10 பேருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்காரவிடம் இன்று (11) தெரிவித்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நியமனம் பெற்ற இவர்கள், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றனர்....
யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் அக்காணிகளில் பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்று மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் இன்று தெரிவித்தார். மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் புதன்கிழமை (11) இடம்பெற்றது. இதன்போதே அவர்...
Loading posts...
All posts loaded
No more posts