Ad Widget

அனந்தி சசிதரன் சுயேச்சையாக தேர்தலில் குதிக்கிறார்!

தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக  தெரிவித்துள்ளார்

 

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு மாத்திரமே தனக்குக் கட்சியிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், வேறு எந்த விடயம் குறித்தும் தனக்குக் கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்றும் அனந்தி மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து முறையான ஒரு விசாரணை நடத்தப்பட்டிருக்குமானால், தனது நிலைப்பாட்டைத் தான் நிரூபித்திருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

Related Posts