இலங்கையின் பிரபல ஆண்கள் பாடசாலையாக விளங்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ இலட்சனை வெளியீட்டு நிகழ்வு திங்கட்கிழமை (06) கல்லூரியின் றொமைன்குக் மண்டபத்தில் கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இலட்சனை வெளியீட்டு நிகழ்வில் யாழ். மெதடிஸ்மிஷன் திருச்சபை தேவாலய குருமுதல்வர் வண. ரவிசங்கர் நைல்ஸ் அடிகளார் கலந்துகொண்டு இலட்சனையை திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில், கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.