Ad Widget

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்!

மாங்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது;- மாங்குளம், ஐயன்குளம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான இளைஞன் ஒருவனை சோதனையிட்டபோது அவரது பையில் கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞனை கைது...

எனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி – விபூசிகா

என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை(26) அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோதே விபூசிகா இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், எனது அம்மாவை...
Ad Widget

இன்று யாழ். வருகின்றார் பிரதமர்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை மாவட்டச் செயலகத்தில் வைத்து சந்திக்கவுள்ள பிரதமர், அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகள்...

கதிர்காமர் கொலை வழக்கு: 2 பொலிஸாருக்கு அழைப்பு

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளிப்பதற்கு வருமாறு இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது. இளைப்பாரிய பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.ஆர். ஜயவர்த்தன, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சரத் லூகொட ஆகியோர் மார்ச் 31ஆம் திகதியன்று சாட்சியமளிக்க வருமாறு நீதிமன்றம் அழைத்துள்ளது. இந்த...

இலங்கை – சீனாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்களும் கைச்சாத்து

வலயத்தில் முக்கியமானதொரு இராஜதந்திர முக்கியஸ்தானத்தை இலங்கைக்கு எப்போதும் வழங்கத் தயாராக உள்ளதாக சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று வியாழக்கிழமை (26) உறுதியளித்தார். சீனாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (26) இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது....

இலங்கை பணிப்பெண்கள் இருவரின் சடலங்கள் சவுதியில் மீட்பு

சவுதி அரேபியாவின்அஸீர் பிரதேசத்தில் பணிப்பெண்களாக சேவையாற்றுவதற்கு சென்றிருந்த இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கின்றது. இவ்விருவரில் ஒருவர் விபத்திலும் மற்றவர் எரியூட்டப்பட்ட நிலையிலும் மரணமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருகோணமலை உப்புவேலியை வசிப்பிடமாக நசுரா என்றும் அவர் ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.ஆறு மாதங்களுக்கு முன்னரே பணிப்பெண்ணாக அவர் சவுதிக்கு சென்றுள்ளார்....

மூன்றாகப் பிளந்தது சு.க

புதிய எதிர்க்கட்சித் தலைவரொருவரின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாகப் பிளந்துள்ளது என சுட்டிக்காட்டியது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (26) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது உரையாற்றிய தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் அமைப்பாளர் குணதாச அமரசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய...

‘ஜெர்மன்விங்ஸ் விமானம் இரண்டாம் விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது ‘

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். [caption id="attachment_42430" align="aligncenter" width="625"] டுவிட்டரில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் விமானி அந்த்ரேயாஸ் லுபிட்ஸ் புகைப்படம். படம் உறுதிசெய்யப்படவில்லை. [/caption] கீழே விழுந்த விமானத்தின் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைக்கப்பெற்ற...

வவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு 2ஆம் மாடியில் இருந்து அழைப்பு

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி. தேவராசாவை இரண்டாம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பொலிஸார் ஊடாக இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும்...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஞாயிறு விடுமுறை வேண்டும்

ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலை வகுப்புக்களை நடத்தவதற்கு ஏதுவாக தனியார் கல்வி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரி ஜாக்கிராத் சைதன்ய சுவாமிகள் தெரிவித்தார். வரலாற்றுச்சிறப்பு மிக்க 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுன்னாகம் தாழையம்பதி அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் 'தாழையம்பதியான் இசைத்தமிழ்' இசைப்பேழை இறுவெட்டு...

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்

அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500...

இலங்கை கடும் சவால்களை எதிர்கொள்ள நேரும் – அமெரிக்கா

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னைய ஜனாதிபதியின் தீங்குமிக்க கொள்கையிலிருந்து நாட்டை விலக்கிச் செல்கின்ற போதும் முன்னைய அரசாங்கம் விட்டுச் சென்ற நிதி சிக்கல் உட்பட பல கடுமையான சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடுமென அமெரிக்கா கூறியுள்ளது. 'இலங்கை மக்களும் சிறிசேன அரசாங்கமும் இனிவரும் மாதங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆயினும், இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதில்...

கோட்டாவின் கணக்குகளை சோதிக்க உத்தரவு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின், சகல வங்கிக்கணக்குகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு காலி நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மற்றும் அவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபையின் அனைத்து அங்கத்தவர்களினதும் வங்கிக் கணக்குகளையும் சோதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், நாட்டுக்கு திரும்பியுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்...

கமலஹாசனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்

மும்பையில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ) நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன், இந்தி நடிகர் அமீர்கான் மற்றும் திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமீர்கான் பேசும்போது, கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்துக்கு 2013–ல் பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது. அப்போது கமலுக்கு ஆதரவாக நான்...

திங்கள் முதல் அமுலுக்கு வருகிறது இலவச WiFi திட்டம்!

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளராக களம் இறங்கிய மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலவச WiFi வழங்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட நாட்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இதுவரை இலவச WiFi வழங்கப்படும் திட்டம் செயற்படுத்தப்படவில்லை. இதனால் இளைஞர் யுவதிகள் விரக்தியில் உள்ளனர்....

தேசிய கீதத்தை தமிழில் பாட ஊக்குவிப்போம் உண்மையான நல்லிணக்கமே இலக்கு – பிரதமர் ரணில் உறுதி

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னாபிரிக்கா போன்று உண்மையை கண்டறிய விசேட குழு அமைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த அடுத்த கட்டம் நோக்கிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினூடாக சுமார் ஒரு மில்லியன் வரையான வீட்டு சுற்றுச்சூழலை சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொலிஸார், இராணுவத்தினர், சமூக சேவை அமைப்புகள் மற்றும் சுகாதார...

சந்திரிக்காவுக்கு சந்தர்ப்பம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தககவல் வெளியிட்டுள்ளது. அது தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்னசிறி விக்கிரம நாயக்க இராஜினாமா செய்வதற்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் இதற்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் நாடாளுமன்ற...

தீர்வு கிடைக்கும் வரை போராடுவோம்; நுண்கலைப்பீட மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது

யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் இன்று காலை மூன்றாவது தடவையாக வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டனர். யாழ்.பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த சித்திரமும் வடிவமைப்பும் துறை மாணவர்கள் மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 16 ஆம் திகதி வகுப்புப் பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். எனினும் அவர்களது கோரிக்கைக்கு பதில் கிடைக்காத போது...

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சின்னப்பிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றார் – சுமந்திரன்

அண்மையில் கனடா சென்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் , முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் சிறுபிள்ளைத்தனமாக கருத்து மோதிக்கொள்வதாக கூறினார். அத்துடன் தான் வருகின்ற தேர்தலில் யாழ்மாவட்டத்தில்போட்டியிடப்போவதாகவும் தோல்வியடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாகவும் தெரிவித்தார் அத்துடன் முதலமைச்சர் கொண்டுவந்த இனப்படுகொலை தீர்மானம் தனக்கோ சம்பந்தனுக்கோ தெரியாது...
Loading posts...

All posts loaded

No more posts