நிலையான அரசாங்கத்தை அமைக்க மக்களின் பங்களிப்பு அவசியம்! – யாழில் அனுரகுமார திசாநாயக்க

விலை போகாத பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதுடன், நிலையான அரசாங்கத்தினை அமைப்பதற்கு இந்த தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் அங்கு...

16வயதிலே போராட சென்ற பெண் இன்று அரசியலில்! யார் இந்த கோகிலா!

கோகிலவாணி  ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தவர். 16 வயதில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். ஐக்கிய அமெரிக்கா நாடுகளின் சர்வதேச வருகையாளர் தலைமைத்துவ செயற்திட்டதில் (International Visitor Leadership Programme) பங்குபற்றியவர். 2014 நவம்பரில் இருந்து USAIDஇன் நிதி வசதியுடன் மீள் சுழற்சி காகித தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பணியில் இணைந்து கொண்டுள்ளவர். தற்போது தமிழ்த்தேசயி மக்கள் முன்னணியில்...
Ad Widget

கைவிரலை உடைக்க பார்த்தார், தாக்கவில்லை பிடித்து தள்ளினேன் : மஹிந்த

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அங்கு வந்திருந்த ஒருவரை தாக்குதல் நடத்தியிருந்ததாக செய்திகள்...

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்யலாம் – இந்திய உயர்நீதிமன்றம் அனுமதி!

சி.பி.ஐ. விசாரிக்காத வழக்குகளில் ஆயுள் சிறை பெற்ற கைதிகளை விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ததை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்துத் தெரிவித்துள்ளது....

முதன் முதலில் தனிதமிழ் ஈழம் தான் ஒரே தீர்வென்பதனை முன்னிறுத்திய கட்சி எமது கட்சி – டர்ஷன்

கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாது நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்குமாக தமிழர் விடுதலை கூட்டணி குரல் கொடுக்கும். நாட்டின் இன்றைய சூழ்நிலையில் தலைநகர் கொழும்பில் தொன்மையான  தமிழ் கட்சி என்றவகையில்  பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்  போட்டியிடுகின்றோம். இன்று பேரினவாத கட்சிகளோடு இணைந்து மற்றவர்கள் போட்டியிடுகின்ற நிலையில் நாம் தமிழ் கட்சியும்...

அரசிலிருந்து கூண்டோடு வெளியேற தயாராகின்றனர் சு.க. அமைச்சர்கள்! – அனுமதியளிக்குமாறு மைத்திரியிடம் கோரிக்கை!!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசிலிருந்து கூண்டோடு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக ஜனாதிபதியிடம் அனுமதிபெறவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக்கூட்டி அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான யோசனை நேற்று மாலை ஜனாதிபதியிடம்...

யாழ். ஆயருடன் அநுரகுமார திஸநாயக்கா சந்திப்பு!

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கா இன்று வியாழக்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அநுரகுமாரவுடன் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரனும் கூட இருந்தார். இதேவேளை - மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட தலைமையத்தில் நடைபெறும்...

விதிமுறைகளுக்கு ஏற்ப பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு யாழில் கோரிக்கை

தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நீதியானதும், சமாதானமான முறையிலும் நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமான...

மக்களுடன் நின்று மக்களுக்காக உழைப்பவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே எனது அரசியல் நகர்வின் ஊடாக ஏற்படுத்தப்பட்டதுதான் சமுர்த்தி உதவித்திட்டம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். தொல்புரத்தில் சமுர்த்தி பயனாளிகளுடன் நேற்றய தினம் (22) கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது...

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியது பனை அபிவிருத்திக் கண்காட்சி

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. ஒரு வாரம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராசா நேற்று புதன்கிழமை (22.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் பதிநான்கு காட்சி அறைகளில் பனை...

மஹிந்தவிடம் நேரடி கேள்வி..! நீங்கள் தயாரா…?

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களுடன், நேரடிபேஸ்புக் கேள்வி, பதிலுக்கு இன்றைய தினம், ஜூலை 23, 2015, காலை 8.30 முதல் இடம் பெறுகின்றது நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். Thank you everyone for all the questions and feedback. I saw so many good wishes as well - thank you for...

பெண் குரலில் பேசி ரீலோட் பெற்ற மாணவனுக்கு தர்ம அடி

பெண் குரலில் காதல் வார்த்தைகளை பேசி, அலைபேசிக்கான மீள்நிரப்பு பணத்தை (ரீலோட்) சக மாணவர்களிடமிருந்து பெற்றுகொண்டு மாணவனுக்கு தர்மஅடி விழுந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. மாணவனொருவன் தனது பாடசாலையில் கல்வி பயின்றுவரும் சக மாணவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, பெண் குரலில் காதல் வார்த்தைகளை பேசியுள்ளார். மாணவர்கள் காதல் வலையில் வீழ்ந்ததும் அவர்களிடமிருந்து 1,000 ரூபாய்க்கும் மேலதிகாமான...

அனைத்து கொடுப்பனவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் – பிரதமர்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர்...

வட மாகாண சபையில் சிவாஜிலிங்கம் குழப்பம்!

வட மாகாண சபை அமர்வு இன்று இடம்பெற்று வரும் நிலையில் அதில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் எம்.கே.சிவாஜிலிங்கம் பங்கேற்றுள்ளார். வட மாகாண சபை உறுப்பினர்களாக உள்ள த.சித்தார்த்தன், க.சிவநேசன், க.சிவமோகன், எம்.கே. சிவாஜிலிங்கம், இ.அங்கஜன், ஜயதிலக ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் ஐந்து பேர் தற்போதைக்கு விடுப்பு பெற்றுள்ளனர். ஆனால் சிவாஜிலிங்கம் மாத்திரம்...

இளைஞர் யுவதிகளுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு – மஹிந்த

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வித் துறைகளுக்காக மாதாந்தம் 5000 ரூபா வரையான கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது அரசாங்கத்தினால் ஆரம்பித்து இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மஹிந்த...

மகனை வாஷிங் மெஷினில் அடைத்து பேஸ்புக்கில் போட்டோ போட்ட அம்மா

டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் திணித்து, அதைப் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் தாய் ஒருவர். கர்ட்னி ஸ்டீவர்ட் (21) என்ற பெண்மணி தான் இவ்வாறு பிரச்சினையில் சிக்கியவர். இவருக்கு இரண்டரை வயதில் டவுண் சின்ட்ரோம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் உள்ளார். சமீபத்தில் தனது மகனை...

ஹக்கீமின் மஹியாவை அலுவலகம் மீது தாக்குதல்

கண்டி, கட்டுகஸ்தோட்டை மஹியாவை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசார காரியாலயத்தின் மீது நேற்றிரவு இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த காரியாலயத்தின் பதாதைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு வரை யாரையும் கைது செய்யவில்லை என பொலிஸ் ஊடகபேச்சாளர் நிலையம் தமிழ்மிரருக்கு தெரிவித்தது. சம்பவம்...

தேசிய பாடசாலை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கோரல்

2016ஆம் ஆண்டில் தேசிய பாடசாலை இடமாற்றத்திற்கான விண்ணப்பங்களை கோர கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இவ்விடமாற்றம் விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்து தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இடமாற்றம் தொடர்பில் குறித்த விண்ணப்பங்களில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு விண்ணப்பங்களை எதிர்வரும்...

சயனைட் குப்பிகளுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர் வாய் திறக்க மறுப்பு

75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது. ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் உச்சிப்புளி பஸ் நிலையம் அருகே தீவிர...

திருநெல்வேலியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

தமிழ்நாடு - திருநெல்வேலி அருகே நேற்று (22) புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அம்புலன்ஸ் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கங்கைகொண்டான் கலைஞர் காலனியைச் சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் தியாகராஜன் (42வயது), சசிகுமார் (38 வயது)...
Loading posts...

All posts loaded

No more posts