Ad Widget

மக்களுடன் நின்று மக்களுக்காக உழைப்பவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே எனது அரசியல் நகர்வின் ஊடாக ஏற்படுத்தப்பட்டதுதான் சமுர்த்தி உதவித்திட்டம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

11745457_1635926863348848_3266470759382418482_n

தொல்புரத்தில் சமுர்த்தி பயனாளிகளுடன் நேற்றய தினம் (22) கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எமது மக்களின் வாழ்வாதாரத்தில் மேம்பாடு காண வேண்டும் என்ற நோக்கின் அடிப்படையிலேயே சமுர்த்தித்திட்டத்தையும் கடந்த காலங்களில் இணக்க அரசியல் ஊடாக பெற்றுக்கொடுத்துள்ளோம்.

அந்தவகையில் சமுர்த்தி பயனாளிகளின் தொகையை அதிகரிப்பதுடன் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமென்பதே எமது இன்றைய நிலைப்பாடாகும்.

எமது நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் மக்களுடன் நின்று மக்களுக்காக உழைப்பவர்களுக்கு மக்கள் முழுமையான ஆதரவையும் வாக்குப் பலத்தையும் தரும் பட்சத்தில் நிச்சயம் நாம் மக்களின் வாழ்வில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) உடனிருந்தார்.

Related Posts