Ad Widget

பெண் குரலில் பேசி ரீலோட் பெற்ற மாணவனுக்கு தர்ம அடி

பெண் குரலில் காதல் வார்த்தைகளை பேசி, அலைபேசிக்கான மீள்நிரப்பு பணத்தை (ரீலோட்) சக மாணவர்களிடமிருந்து பெற்றுகொண்டு மாணவனுக்கு தர்மஅடி விழுந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

மாணவனொருவன் தனது பாடசாலையில் கல்வி பயின்றுவரும் சக மாணவர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, பெண் குரலில் காதல் வார்த்தைகளை பேசியுள்ளார். மாணவர்கள் காதல் வலையில் வீழ்ந்ததும் அவர்களிடமிருந்து 1,000 ரூபாய்க்கும் மேலதிகாமான தொகையை அலைபேசிக்கான மீள்நிரப்பு பணமாக பெற்றுகொண்டுள்ளான்.

தம்முடன் பேசியது பெண் அல்ல மாணவனே என்பதை அறிந்துகொண்ட ஏனைய மாணவர்கள் மேற்படி மாணவன் மீது தாக்குதலை மேற்கொண்டதால் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றான்.

அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த பொலிஸார், மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததுடன் அலைபேசிக்கு வரும் அநாமதைய அழைப்புகள் குறித்து அவதானமாக இருக்கமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts