மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கொட்டடி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த கனகரத்தினம் பாபு (வயது 38) என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீட்டு மோட்டாருக்கு திருத்த வேலை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சடலம், யாழ்ப்பாணம் போதனா...

வலி வடக்கில் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது

வலிவடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட் காணி மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்றம் குறித்த கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட...
Ad Widget

யாழில் கஞ்சா வைத்திருந்தவருக்கு 03 மாத சிறைத் தண்டனை

யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத்தண்டனையை விதித்து நீதிமன்றம். குறித்த இளைஞன் கடந்த 09.06.2016 குருநகர் பகுதியில் 300 கிராம் கஞ்சா பொதியுடன் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்திருந்த...

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தேவை ஏற்படின் உடனடியாக அறிவிக்கவும்

கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தேவை ஏற்படும் மக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். மக்கள் தமது குடிநீர் தேவைகளை அறிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான குடிநீரை உரிய திணைக்களங்களினூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார். நாட்டில் காணப்படும் வறட்சி காலநிலை காரணமாக...

யாழ்.ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மீள்குடியேற்றம், சுகாதாரம், கல்வி, விவசாயம், போக்குவரத்து, நீர் விநியோகம், மின்விநியோகம், உள்ளூராட்சி, வீடமைப்பு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. அத்தோடு சில திட்டங்களுக்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே குறித்த விடயங்கள்...

வடக்கு முதலமைச்சரின் கோரிக்கையால் கைவிடப்பட்டது அரசியல் கைதிகளின் போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் இன்று காலை ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடமாகாண...

வடக்கு முதல்வருக்கு அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு தெரிவிக்கவேண்டும்!

வடக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதே எனவும் இதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எந்தவித வேறுபாடுகளும் காட்டாது பூரண ஆதரவை வழங்கவேண்டுமெனவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டமான்...

ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல்

கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த வியாழக்கிழமை (22)அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 மில்லியன் பெறுமதியான 04 சரீர பிணையில் அவரை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார். நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஏழாவது நாளாகவும் தொடர்கிறது தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரது உண்ணாவிரத போராட்டம் ஏழாவது நாளா இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரும் கடந்த 21ஆம் திகதி தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் அரசியல் கைதிகள்...

இந்து ஆலயம் தீயிட்டு எரிப்பு; படையினர் குவிப்பு!! மக்கள் அச்சத்தில்!!

திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் ஆலயத்தின் மடப்பள்ளி, அங்குள்ள பௌத்த துறவியொருவரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10.30 மணியளவில் ஆளரவம் இல்லாத நேரத்தில் ஆலயத்தின் பின்னால் மறைந்து வந்த காவியுடை தரித்த பௌத்த துறவி, கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று...

விகாரைகளை அகற்றுமாறு கோருவதற்கு சி.விக்கு உரிமை இல்லை!

வடக்கிலிருந்து பௌத்த விகாரைகளை அகற்றுமாறு கோருவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எவ்விதமான உரிமைகளும் இல்லையென, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரிப் பிரதியமைச்சர் ரஞ்சன் இராமநாயக்க, நேற்று (26) கூறினார். நாட்டின் வேறு பகுதிகளில் உள்ளது போன்று, வடக்கிலும் வழிபாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனால், வடக்கிலுள்ள பௌத்த விகாரைகளை அகற்ற வேண்டிய தேவையில்லை என,...

வடக்கு முதல்வரை கைதுசெய்ய வேண்டுமாம்!: கம்மன்பில கூறும் காரணங்கள்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து, பிணையில் வௌிவரமுடியாத படி, விளக்கமறியலில் வைக்கும் வரை தான் காத்திருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ´எழுக தமிழ்´ நிகழ்வுக்கு முதல்வர் உத்தியோகபூர்வமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் போராட்டத்திற்கு அரச சொத்துக்களை பயன்படுத்தியதாகவும்...

தெல்லிப்பளையில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு

தெல்லிப்பளை - குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து பெருந்தொகை குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் இந்த ஆயுதங்களை கண்டுள்ளனர். பின்னர் அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் அப் பகுதிக்குச் சென்ற தெல்லிப்பளை பொலிஸாரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் விசேட...

காலியில் நிலநடுக்கம்

காலி பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு. இன்று காலை ஏற்பட்ட இந்த நில அதிர்வின் மூலம் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்கள் 05 பேருக்கு விளக்கமறியல்; 11 பேரை கைது செய்ய உத்தரவு

1998 ஆம் ஆண்டு 2 இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்தில் 05 இராணுவ வீர்ர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார். 1998 ஆம் ஆண்டு அச்சுவேலிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்த 16 இராணுவத்தினர் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

நினைவுத் தீபங்களேற்றி தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி

துளி நீரேனும் அருந்தாது உயிர்க்கொடை புரிந்த தியாகி திலீபனின் 29ஆவது நினைவு தினமான நேற்று திங்கட்கிழமை (26.09.2016) மாலை 6மணிக்கு நல்லூரில் அவரது இடித்தழிக்கப்பட்ட நினைவுத் தூபி அருகே நினைவுத் தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், பா. கஜதீபன் ஆகியோருடன் ஏராளமான பொதுமக்களும்...

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தலும் இரத்ததானமும்

தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாநோன்பிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த லெப் கேணல் தீலீபன் அவர்களின் 29ஆம் அண்டு நினைவு நாள் நேற்றாகும். இதனை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் கந்தர்மடத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தியாகதீபம் திலீபன் அவர்களது தியாகத்தினை நினைவு கூரும் முகமாக இரத்தான நிகழ்வும் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர்வடிகட்டியை எதிர்வரும் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பணப் பல்கலைக்கழக ஆண் மாணர்கள் விடுதியில் போதிய நீர் வடிகட்டிகள் இன்மையால் குடிதண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்வதாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் ஜனாதிபதிக்கும் கடந்த மாதம் எழுத்துமூலம் கோரிக்கையை...

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கடும்போக்குவாதத்தை அனுமதிக்கின்றார் : ராஜன் ஹூல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடும்போக்குவாத்தை அனுமதிக்கின்றார் என பிரபல கல்வியியலாளர் கலாநிதி ராஜன் ஹூல் குற்றம் சுமத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ள அவர் மாணவர்கள் கடும்போக்குவாத போராட்டங்களை நடாத்த அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக...
Loading posts...

All posts loaded

No more posts