- Friday
- May 8th, 2026
விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட வலுவற்றது. எனவே, அந்த விதிகள் சட்ட வலுவற்றது என தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோளை பரிசீலனை...
மண்டூர் முருகன் ஆலய நிர்வாகப் பொறுப்பதிகாரிக்கு ஆலயம் சார்ந்தோர் ஒத்துழைக்க வேண்டும் இந்த வழக்கில் விசேட நியமனம் பெற்றுள்ள நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல் மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலய நிர்வாகச் செயற்பாடுகள் சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு பிரதம நீதியரசரினால் நியமனம் செய்யப்பட்டுள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், இந்த ஆலயத்தின் கணக்கு வழக்குகள், நிர்வாகம்...
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழர், சிங்களவர், முஸ்லிம் என மூவின மக்களும் ஒன்றிணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளார் மின்சக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரோ. பண்டார கமவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களிடையே உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் இறந்துபோன புலிகளின் எச்சங்களுக்கு புத்துயிர் கொடுக்கவே வடக்கு மாகாண முதலமைச்சர்...
வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்றத்திற்கு நேற்று வந்த நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில்...
யாழ்ப்பமாணம் மாதகல்லை சேர்ந்த ஊடகவியலாளர் அஸ்வின், காலமானார்.உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப் பயணிக்கும் போது வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சையின்றி அவர் உயிரிழந்ததாகவும் அறியமுடிகின்றது. சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
வடமாகாணத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் ஊழல் இடம்பெறுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் வீதிகளைப் புனரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் எவ்வித கேள்விகளும் கோரப்படாமல் வழங்கப்படுவதாக குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சுமந்திரன், பருத்தித்துறை - மருதங்கேணி வீதி...
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 3.00 மணிவரை மக்கள் வழிபாடுகளில் ஈடுபடலாம் என இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நவராத்திரி பூஜைகளை மேற்கொள்வதற்காக இராணுவத்தினரிடம்...
ஏ-9 வீதியில் உழவியந்திரத்தை ஓட்டிச்சென்ற இளைஞன் ஒருவருக்கும், இன்னுமொரு வாகனச் சாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தினை விலக்குத் தீர்ப்பதற்காக அவிடத்திற்குச் சென்ற காவல்துறையினர் இரும்புச் சங்கிலியால் அந்த இளைஞனை மோசமாகத் தாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனே தம்மை இரும்புச் சங்கிலியால் தாக்க வந்ததாகவும், அவ்விளைஞன் மதுபோதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்....
'சமாதானமும்,சகோதரத்துவமும், நல்லிணக்கமும்' எனும் தொனிப்பொருளில் 42 ஆவது தேசிய விளையாட்டு விழா நாளை வியாழக்கிழமை ( 29) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான தேசிய விழாவினை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. நாளைய ஆரம்ப...
வலி.வடக்கில் கடந்த 26 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட காங்கேசன்துறை பகுதிகளில் நான்கு குதிரைகள் கட்டாகாலிகளாக அலைந்து திரிகின்றன. இந்த குதிரைகளை இராணுவத்தினரே வளர்ப்பதாக தெரிய வருகின்றது. குறித்த நான்கு குதிரைகளில் ஒரு குதிரை நெடுந்தீவில் வாழும் நபர் ஒருவரின் வளர்ப்பு குதிரை என கண்டறியப்பட்டு உள்ளது....
நீர்வேலி பகுதியில் தாய் ஒருவர் தனது மகளுக்கு தடியினாலும் , கைகளினாலும் , கத்தியிலானும் , மிக மோசமாக தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன கடந்த வியாழக்கிழமை குறித்த சம்பவம் நடைபெற்று இருந்தது. குறித்த வீடியோ காட்சி பகிரப்பட்டத்தை அடுத்து , அது தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அதேவேளை...
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சாட்சியம் ஒருவரை குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் சந்தேகநபர் ஒருவர் அச்சுறுத்துவதாக மல்லாகம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஊடாக சட்டத்தரணி, சாட்சியம் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்...
வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்து அவர், அரசியலமைப்பு என்ற...
கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது. வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள்...
கிளிநொச்சி பொதுச்சந்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா நட்டஈடு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வர்த்தகர்களுக்கு உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுடனான சந்திப்பு நேற்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற போதே அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்துள்ளார். தீ விபத்தில்...
தனது இனத்தின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் 12 நாட்கள் நீராகாரம் எதுவுமின்றி உண்ணாநோன்பிருந்து சாவைத்தழுவிக்கொண்ட தியாகி லெப்.கேணல் திலீபனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் ஜனநாயகப்போராளிக் கட்சி உறுப்பினர்களும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அனுமதிகேட்டு அஞ்சலி செலுத்தியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தொலைபேசிமூலம் பிரதமர்...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாங்கள் விக்னேஸ்வரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் சிங்களவர்களிடம் சண்டித்தனம் காட்ட வர வேண்டாம். சிங்களவர்களின் நிலத்தில் வசித்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று. எனக்கு...
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “வடக்கு, கிழக்கு இணைப்பை எந்த...
Loading posts...
All posts loaded
No more posts
