இனிவரும் நாட்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சகதி எரிசக்தி அமைச்சு, அறிவித்துள்ளது.
கடந்த 17ஆம் திகதிமுதல், நாடாளாவிய ரீதியில் காலை 8 மணி முதல் ஒரு மணித்தியாலம் மற்றும் மாலை 6 மணிக்கு பிறகு 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இனிவரும் நாட்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி எரிசக்தி அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்னுற்பத்தியில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.