யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள்வெட்டு, குழுமோதல்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு நேற்று வியாழக்கிழமை (20) முதல் செயற்படத் தொடங்கியதுடன், முதல் நாள் ரோந்து நடவடிக்கையில் கொக்குவில் சந்திப்பகுதியில் வைத்து, வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளது.
இந்தக் குழு தொடர்ந்து வரும் நாட்களில், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.