யாழ் பல்கலைக்கழகத்தில் திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள்

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முன்னறில் ஒன்று கூடிய மாணவர்கள் திலீபனின் படத்திற்கு முன்னால் ஈகைச்கூடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு, ஜனநாயக போராளிகள் கட்சியின்...

கால்நடை மருத்துவ நடமாடும் சேவை உடையார்கட்டில் இடம்பெற்றது

வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் பயன் பெறும் விதமாகக் கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25.09.2016) நடைபெற்றுள்ளது. உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை வடக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். கால்நடை...
Ad Widget

‘இருமுகன்’ படம் வசூலில் சாதனை!

'சீயான்' விக்ரம் நடித்த 'இருமுகன்' படம் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிகர் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த 'இருமுகன்' படம் கடந்த 8 ம் தேதி வெளியானது.கலவையான விமர்சனங்கள் வந்த பொழுதும்...

தியாகி திலீபன் நினைவஞ்சலியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தியாகதீபம் திலீபனின் அஞ்சலி வணக்க நிகழ்வுகள் யாழ்ப்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வந்தநிலையில் இறுதிநாள் நிகழ்வு இன்றைய தினம் யாழப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...

தியாகதீபம் திலீபனின் 29ஆம் ஆண்டு இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று

தியாகதீபம் லெப்ரினன் கேணல் திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவுநாளின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் முதன்முதலில் சாத்வீகப்போராட்டத்தின் உச்சக்கட்டமான நீராகாரம் இன்றி சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பெற்றுள்ளான். யாழ்ப்பாணம் – ஊரெழுவைச் இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் திலீபன், 1963ஆம் ஆண்டு...

அனுராதபுரச் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்க் கைதி ஒருவர் போகம்பரை சிறைக்கு மாற்றப்பட்டார்!

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கண்டி நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய 16 கைதிகளும் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது!! கூட்டமைப்புக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!! சுமந்திரன்

சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ் கூட்டமைப்புக்கு எதிரானது எனவும், அதற்கும் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், அதில் தாம் கலந்துகொள்ளவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்குப் பாதகம் விளைவிக்கும் எனவும் குற்றம் சுமத்தினார். நாட்டில் தற்போது புதிய...

‘தமிழரின் நம்பிக்கைக்கு உரிய தலைவன்’ என வடக்கு முதல்வரை விழித்த மக்கள்

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் நேற்று சனிக்கிழமை (24) இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, 'தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவன்', 'தமிழரின் தலைவன்' என விழித்துக் கோசமிட்டனர். யாழ். பல்கலைக்கழகம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து இரு பிரிவுகளாக ஆரம்பமான பேரணியினை வடக்கு மாகாண...

எழுக தமிழ் : அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும்

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற எழுக தமிழ் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு இடையூறை விளைவிக்கும் என்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். ரத்டெம்பேயில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,...

‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல

“‘எழுக தமிழ்’ பேரணியில் பங்குபற்றாமை எதிர்ப்பு அல்ல. தமிழரசுக் கட்சியைத் தாக்குவதை ஏற்கவும் முடியாது” என, தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்தார். சனிக்கிழமை (24) இடம்பெற்ற “எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ளாமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

சிகரெட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பு?

சிகரெட்டின் விலையை ஐந்து ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான ஆவணம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 15 வீத வற் வரிக்கு அமைவாக சிகரெட்டின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். ஏற்கனவே...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம்!!

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் தொடர்பில் புதிய ஒழுங்குமுறை திட்டங்களை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பயணிகள் போக்குவரத்துக்காக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டிகளால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் இந்த வேலைத் திட்டம்...

கிளிநொச்சியில் கிபிர் குண்டு மீட்பு

கிளிநொச்சி, தர்மபுரம் காட்டுப் பகுதியிலிருந்து விமானக் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. அப் பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இதனை கண்டெடுத்துள்ளனர். இந்த குண்டு, 6 அடி நீளமும் சுமார் 300 கிலோ கிராம் எடை கொண்டதும் எனத் தெரியவந்துள்ளது.

அரசியல் தீர்வினைப் பெற சர்வதேச சமூகம் உதவ வேண்டும்!

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய அதிகாரி நீக்லஸ் பேர்னாட் வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தை சந்தித்து கலந்துரையாடினார். சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிவஞானம் மேலும் கூறியதாவது, வட மாகாணத்தின் தற்போதைய நிலமை குறித்து ஆராய்வதற்காக அவர்...

வௌிவாரி பட்டப் படிப்புக்கள் நிறுத்தப்படப் போவதில்லை!

வௌிவாரி பட்டங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக வௌியான தகவலில் உண்மை இல்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வௌிவாரி பட்டப்படிப்புக்களின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி 15 பல்கலைக்கழகங்களில் புதிய வௌிவாரி பட்டப்படிப்புக்களை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக...

‘கேலி செய்தவர்களுக்கு ஒன்று திரண்ட மக்களே பதில் ஆகினர்’

தமிழ் மக்கள் பேரவையினால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணிக்கு குறைந்தது 500 பேராவது வருவார்களா? என்ற பலரது கேள்விக்கு ஒன்று திரண்ட மக்களே இன்று பதிலாவார்கள். இது ஒரு மாபெரும் பேரணி. மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க ஒருங்கிணைத்த பேரணி என முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நேற்று...

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களது விடுதலையை வலியுறுத்தி கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்

'எழுக தமிழ் 2016!' -- தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள...

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா : கஜேந்திரகுமார்

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களின் 65வருட கோரிக்கைகளையும், அவர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான தீர்வு கிடைக்குமா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியின் பொதுக்கூட்டம் நேற்று...

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசம் இல்லை என்று நிரூபிக்க முடியுமா? முதலமைச்சர் சவால்

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் அவர்களுக்கு சமஷ்டியை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு-கிழக்கு மக்களை வந்தேறுகுடிகள் என்று கூறுபவர்கள் சரித்திரபூர்வமாக வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பார்களானால் வடக்கு, கிழக்கு இணைப்பு கோரிக்கையினை இப்போதே கைவிட்டு விடுகின்றோம் என்றும்...
Loading posts...

All posts loaded

No more posts