‘எழுக தமிழ்’ முற்றவெளியில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் வெளிப்படுத்தப்பட்டன

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணி வடக்கு கிழக்கில் இருந்து திரண்டு வந்து இருந்த சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்கு பற்றுதலுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) காலை 9.00 மணியளவில் நல்லூர் முன்றல் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்றல் ஆகிய...

எழுக தமிழ் பேரணி : நேரடி ஒளிபரப்பு

இன்று காலை ஆரம்பித்துள்ள எழுக தமிழ் பேரணியை எம் புலம்பெயர் சமூகமும், சர்வதேசமும் பார்ப்பதற்காக நேரடி ஒளிபரப்ப மேற்கொள்ளப்படுகின்றது. காணொளிகள் : Tamilkingdom ,Vanavil , Alex
Ad Widget

‘எழுக தமிழ்’ பேரணி சென்றடைந்தது முற்றவெளியை

எழுக தமிழ் பேரணியின் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் தற்போது முற்றவெளியை சென்றடைந்துள்ளது. இந்த பேரணியில் மக்கள் அலையாக திரண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். 'எழுக தமிழ்' மாபெரும் பேரணி இன்று காலை...

கடையடைத்து பேரணிக்கு ஆதரவு

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு, யாழ். நகர முழுவதிலும் உள்ள கடைகள் பூட்டப்பட்டு, மக்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். இதன்படி யாழ் நகரபகுதியில் உள்ள வர்த்தக மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், சந்தைகள் என அனைத்தும் பூட்டப்பட்டப்பட்டுள்ளன. யாழ் நகர் தவிர்ந்த வலிகாம்...

யாழ்ப்பாணத்தில் சிறுமியை கொடூரமாக தாக்கிய தாய்க்கு விளக்கமறியல்

நீர்வேலி பகுதியில் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக கொடூரமான முறையில் தாக்கிய பெண்ணை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட மூன்று பிள்ளைகளையும் சிறுவர் நல காப்பகத்தில் ஒப்படைக்குமாறும், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்துமாறும்...

உண்ணாவிரதமிருக்கும் அரசியற் கைதிகள் கோருவது விடுதலையை அல்ல-தவராசா

அனுராதபுரம் சிறையில் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகளை நேற்று (23) வெள்ளிக் கிழமை பிற்பகல் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா நேரில் சென்று சந்தித்த போது ´நாங்கள் கோருவது, உடனடி விடுதலையை அல்ல, எமக்கான துரித நீதியையும் , எமக்கு விளங்கக் கூடிய மொழியிலான நீதி நடவடிக்கைகளையுமே´...

முதல்வர் தலைமையில் ஆரம்பமானது எழுக தமிழ் பேரணி

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான எழுக தமிழ் பேரணி நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக முன்றலில் மற்றொரு பேரணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது். இவ் பேரணியானது, யாழ் நல்லூர் கோயிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் முதலாம் குருக்கு வீதி, பலாலிவீதி, யாழ் அஸ்பத்திரி வீதியூடாக சென்று யாழ் திறந்த வெளியில்யில் மக்கள் பொதுக்கூட்டம்...

10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகளை வழங்கி வைத்தார் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23.09.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விவசாய உள்ளீடுகளை வழங்கி வைத்துள்ளார். விவசாயத் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை...

அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் முதல் கட்டமாக அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 தமிழ் அரசியல் கைதிகளே சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை நேற்ற முன்தினம் 21 ஆம் திகதி...

அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் இன்று முதல் கட்டுப்பாட்டு விலை!!

அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இதன் ஊடாக பல மருந்துப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு மருந்துப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அமுலாக்கப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதேநேரம் எதிர்காலத்தில் குருதி பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான...

எழுச்சி பேரணியை குழப்பும் நடவடிக்கை ஆரம்பம்!

வடமராட்சிக் கிழக்கு பகுதிகளில் விசமிகள் சிலர் ஒரு வெள்ளை நிற முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்கி மூலம் நாளை(24 ) நடைபெறவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணியை குழப்பும் வகையில் வீட்டிற்கு ஒருவர் வா.எழுந்து வா தமிழீழம் அமைப்போம் போன்ற பல கருத்துக்களை முன்வைத்து ஒலிபெருக்கி கொண்டு தற்போது சென்று கொண்டிருக்கிறார்கள்
.

பேரணியைக் குழப்பும் பொருட்டு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன!

தமிழ் மக்கள் பேரவையின் பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன என எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளதுடன், பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சட்டபூர்வமாகச் செய்யப்பட்டிருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்...

‘எழுக தமிழ்’ நிகழ்விற்கு தமிழ் மக்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்-தமிழ் சிவில் சமூக அமையம்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்பட வேண்டும். அது தனி நபர்களிலோ, குழுக்களிலோ தங்கியிருக்க முடியாது என்பதில் தமிழ் சிவில் சமூக அமையம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளது. எமக்கான தீர்வை நாங்களே தான் பெற்றுக்கொள்ள முடியும், வேண்டும். அதை வேறு யாரும் பெற்றுத்தர முடியாது. தெளிவான அரசியல் நோக்கோடு எதிர் நோக்குப் பார்வையும் மக்கள்...

‘எழுக தமிழ்’ பேரணிக்கு யாழ். கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆதரவு!

நாளை 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு உலகத் தமிழர்கள் பேராதரவு வழங்கியுள்ள நிலையில், தங்களது கடற்றொழிலாளர் சங்கமும் முழு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ். கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....

‘எழுக தமிழ்’ பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. எந்த வித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக...

எழுக தமிழிற்கு ரெலோ தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது!

எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு ரெலோ இயக்கம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. அத்துடன் கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், சிறீக்காந்தா, கென்றி மகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளனர். தமிழினத்தின் இன்றைய நிலையைக் கருத்திற்கொண்டும், குறுகிய அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

பகிடிவதையால் கல்வியை இழந்த மாணவனுக்கு மீளவும் கல்வியைத் தொடர அனுமதிக்குமாறு கோரிக்கை

யாழ். பல்கலையில் பகிடிவதைக்குட்பட்டு கல்வியை இழந்துள்ள மாணவன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து அம் மாணவனை மீண்டும் கல்வி நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியவற்றிடம் வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் கிளிநொச்சியை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மாணவனான மங்களதேவன் ஜெயக்குமார் என்பவர் பகிடிவதை...

புனர்வாழ்விற்கு தகமையுள்ள 23 அரசியற் கைதிகளின் பெயர்கள் வெளியீடு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேருக்கு இவ்வாறு புனர்வாழ்வு பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு...

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: மாகாண சபையில் விவாதிக்க முடியாதாம்!!

உடுவில் மகளிர் கல்லூரி திருச் சபையின் கீழுள்ள பாடசாலை, அந்தப் பாடசாலையில் இடம்பெற்ற அதிபர் நியமனம் தொடர்பான விடயத்தை, வடமாகாண சபையில் விவாதிக்க முடியாது. அத்தகைய அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லையென சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர். கேசவன் சயந்தன், ஆயூப் அஸ்மின், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் கந்தையா சர்வவேஸ்வரன்...

வடமாகாண சபையில் சம்பளம்: புத்தளத்தில் கடமை

வடமாகாண சபையின் நிதியிலிருந்து சம்பளம் பெற்றுக்கொண்டு, புத்தளத்திலுள்ள 5 வைத்தியசாலைகளில் கடமையாற்றும் 21 சுகாதார ஊழியர்கள் தொடர்பில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நேற்று வியாழக்கிழமை (22) விளக்கமளித்தார். வடமாகாண சுகாதார ஊழியர்கள் எவரேனும் வெளி மாகாணங்களில் பணியாற்றுகின்றனரா? என உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், '2009 ஆம் ஆண்டு...
Loading posts...

All posts loaded

No more posts