யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தால் இராணுவ அதிகாரிகள் சிலர், விளக்கமறியலில் வைக்கப்பட்டமை மற்றுமொரு இனவாத செயல் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இனவாத கருத்துகள் ஊடாக அரசியல் நடத்துவது மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்படுவதாக வண. போகமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.
அதன்காரணமாக தமிழ் நீதிபதிகளை நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நபர்கள் காணாமல் போன இரண்டு சம்பவங்கள் தொடர்பிலேயே யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் இராணுவ அதிகாரிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.