Ad Widget

புதிய ஐநா செயலாளரிடம் சம்பந்தன் கோரிக்கை

இலங்கையில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்ப ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐநா சபைக்கு புதிய செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அண்டோனியோ குட்டெரெஸ்சுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்ட விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீண்டும் இலங்கைக்குள் யுத்தம் ஏற்படாதிருப்பதற்கான செயற்பாடுகள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நஸ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகைள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்னெடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு சம்பந்தன் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts