- Thursday
- May 14th, 2026
உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது ‘டெங்கு வெக்சியா’ என இந்த தடுப்பூசி...
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சாஜா நகரில் ஸ்ரீலங்கா பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் சாஜா பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 28 வயதான குறித்த ஸ்ரீலங்கா பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் 38 வயதான...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு தலைவர்களில் ஒருவர் படகு மூலம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவராகவும், ஜெயந்தன் படையணியின் தலைவர்களில் ஒருவராகவும் கடமையாற்றிய ஜெயந்தன் எனப்படும் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்துள்ளார். கடந்த வாரம்...
உலகில் உள்ள நாடுகளிலே இலங்கை மக்கள், அதிகளவில் சமயப் பற்றுள்ளவர்கள் என, ஓர் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஒரு கணக்கெடுப்பின் நிமித்தம், இலங்கை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 99 சதவீதமான மக்கள், தாம் சமயப் பற்றுள்ளவர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, உலகிலுள்ள நாடுகளில் கூடுதலான சமய உணர்வுள்ள நாடுகளுள் ஒன்றாக இலங்கை உள்ளதாக,டெலிகிராப் யூகே, பத்திரிகை...
தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பின் கீழிருந்த மற்றும் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வீடுகளிலிருந்து மீட்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் ஏனைய பெறுமதிமிக்க பொருட்களை, உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சின் தகவல் தெரிவிக்கிறது. அவ்வாறு மீட்கப்பட்ட, சுமார் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை முதற்கட்டமாக கையளிப்பதற்கான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்...
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசாரப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார விழாவின் போது வெளியிடப்பட்ட, ‘கரை எழில் 2016’ என்ற நூல் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனே இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தின் பிரதிகள், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல்...
மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏப்ரல் 14ஆம் திகதி இடம்பெற்ற துரதிர்ஷ்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அவரது அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளது.இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான...
வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும், மழையுடன் கூடிய கடுங்காற்று வீசியமையால், 38 வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாம் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். இந்த அனர்த்தத்தினால், வவுனியா களுக்குன்னமடுவ, பெரியக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே சேதமடைந்தன. எனினும், இந்த அனர்த்தத்தினால் எவருக்கும் சிறு காயங்கள்...
பூநகரி - முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி - பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், இதன்போது காயமடைந்த இருவரும் கிளிநொச்சி...
This is an example of a WordPress post, you could edit this to put information about yourself or your site so readers know where you are coming from. You can create as many posts as you like in order to...
யாழில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்திய சாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் என்1,எச் 1 வைரஸ் காய்ச்சல் தொடர்பிலான மக்கள் தெளிவுப்படுத்தும் ஊடகவியாளர்கள் சந்திப்பு ஒன்று நேற்று யாழ். போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியாசாலையில்...
மானிப்பாய் பொன்னாலை வீதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வீடு புகுந்த இனம்தெரியாத குழுவினர் வாள் முனையில் 19 வயது யுவதியினை கடத்திக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் பொன்னாலை வீதியில் உள்ள வீட்டிற்குள் இரவு 9 மணியளவில் ஓர் கார் மற்றும் 3 மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குழு...
முல்லைத்தீவில் கேப்பாபுலவு இராணுவத் தலைமையகம் முன்பாக தமது பூர்வீகக் காணிகளை மீட்கப் போராடும் மக்களுடன் இராணுவத்தினர் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இம் மக்கள் கடந்த மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த போராட்டத்தை 56ஆவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றனர். இந்த நிலையில் இராணுவத் தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இராணுவத்தினர் சென்று சந்தித்து புத்தாண்டு...
வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பால் கலந்துரையாடுவதற்கான ஆலோசணைக் கூட்டம் எதிர்வரும் 18ம் திகதி வட மாகாண முதலமைச்சர் தலமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் வடக்கில் எதிர் காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்புதல் மற்றும் அது தொடர்பான நடைமுறைப் பிரச்சணைகளுடன் அதற்கான நிதியீட்டல்கள் தொடர்பினில் ஆராயப்படவுள்ளது. குறித்த...
அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். யாழ்.சிறைச்சாலையில்...
ஏவிளம்பி புத்தாண்டை கறுப்புக் கொடிகள் ஏற்றி கறுப்பு தினமான அனுஷ்டித்ததாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டனர் மத்திய அரசாங்கத்திற்கும் வடமாகாண சபைக்கும் கறுப்பு புத்தாண்டு வாழ்த்துக்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய வாழ்வாதாரத்தை கவனத்திற்கொண்டு தமக்கான உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத்தருமாறும் வேலையற்ற பட்டதாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், கடந்த...
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை 54 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சித்திரை புதுவருடத்தில் கறுப்பு ஆடை அணிந்தும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். சித்திரை புதுவருட...
ஏவிளம்பி புத்தாண்டை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் மக்கள் தற்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இவ்வாண்டில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பானது புரையோடிப்போயுள்ள...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் உட்பட படையினர் வென்றெடுத்த வெற்றியை நிலைபெறச் செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிறந்துள்ள ஏவிம்பி புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தாயகப் பிரதேசங்களில் காணிகளை மீட்பதற்கும், காணாமல் போன தமது உறவுகளை கண்டறிந்துதருமாறு கோரி தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின்...
உந்துருளியொன்று வானுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். சுன்னாகம் சந்தியில் நேற்று பிற்பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை வீதியில் இருந்து குறித்த மூவரும் ஒரு உந்துருளியில் தலைக்கவசம் அணியாது பயணித்துள்ளனர். குறித்த மூவரையும் கண்ட காவல்துறையினர் வீதியில் மறித்துள்ள வேளையில், நிற்காது தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
