Ad Widget

பூநகரி முட்கொம்பனில் விபத்து : முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் முன்சென்ற வாகனத்தில் மோதி ஒருவர் பலி

பூநகரி – முட்கொம்பன் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த வாகனம் ஒன்று, பூநகரி – பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும், இதன்போது காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதான பாதையிலிருந்து முட்கொம்பன் வீதிக்கு திரும்ப முற்பட்ட வாகனத்தை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் சாரதி முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது என, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts