Ad Widget

சாஜா நகரில் இலங்கை பெண் கொலை; ஒருவர் கைது

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சாஜா நகரில் ஸ்ரீலங்கா பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா நாட்டவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் சாஜா பொலிஸாரினால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 வயதான குறித்த ஸ்ரீலங்கா பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் 38 வயதான ஸ்ரீலங்கா நாட்டவர் ஒருவரே கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற 8 மணித்தியாலங்களுள் சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை சாஜா பொலிஸார் முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் தகாத உறவுகளை கொண்டிருந்ததாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கொலைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

சாஜா நகரிலுள்ள அவரது வீட்டில் நீச்சல் தடாகத்திற்கு அருகில் கடந்த 14ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

கொலை செய்யப்பட்ட இடத்தில் காணப்பட்ட கைவிரல் அடையாளங்களை கொண்டு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் அந்த நாட்டு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts