- Monday
- July 28th, 2025

ஹப்புத்தளை - ஹல்துமுல்ல - மீறியபெந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார். (more…)

யாழ். நகர்ப் பகுதியில் மிகவும் சுகாதாரச் சீர்கேடான முறையில் இயங்கி வந்த ஜுஸ் உற்பத்தி நிலையம் யாழ். நீதிமன்றினால் சீல் வைத்து மூடப்பட்டது. (more…)

குளிர்பான உற்பத்தியாளர்கள் மீது சட்டத்திற்குபுறம்பான வகையில் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டமை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்குள் புகுந்து அதிகாரிகள் அடாவடித்தனங்களில் ஈடுபட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளதாக யாழ்.வணிகர் சங்கத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். (more…)

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சும் களனி பல்கலைகழக நூலக மற்றும் தகவல் விஞ்ஞான பிரிவும் இணைந்து நடாத்திய 'சுவர்ணபுரவர' எனும் நூலகங்களுக்கிடையிலான தரப்படுத்தலில் யாழ் பொது நூலகம் மாநகர சபைகளுக்கிடையில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது. (more…)

பாடசாலை விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவனை மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞர் மோதித் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றார். (more…)

நல்லூர் சட்டநாதர் கோயிலுக்கு அண்மையில் அமைந்துள்ள சங்கிலி மன்னன் ஆட்சிக்காலத்திலான மந்திரி மனையை மத்திய அரசு கையேற்று தொல்லியல் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்ற வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவின் பிரேரணை அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்ச்சண்டை நிலவியது. (more…)

நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் மனித மலம் கலந்துள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டமையால், இரு வகையான நாமங்களை கொண்ட குடிநீர் போத்தல்களுக்கு, நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. (more…)

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

இலங்கை கிரிக்கெட் மகளிர் அணிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த கந்தசஸ்டி திருவிழாவை முன்னிட்டு சுவாமி வெளி வீதி வலம் வருகின்ற காரணத்தால் கடந்த வெள்ளிக்கிழமை (24.10.2014) முதல் இதுவரையான காலப்பகுதியிலும் சுமார் ஒரு மணித்தியாலம் வரை வீதித் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. (more…)

யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 24 இந்திய மீனவர்களும் தங்களின் விடுதலையை வலியுறுத்தி, திங்கட்கிழமை(27) முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(28) காலை 10.30 மணியுடன் முடிவுக்கு வந்தது. (more…)

தென்னிலங்கையில் உள்ள மிகப்பெரிய கம்பனிகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யாழில் குளிர்பான உற்பத்திகளை நிறுத்தியுள்ளது என யாழ் உப உணவு குளிர்பான உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாணத்தில் மின்சாரமில்லாத 164 கிராமங்களுக்கு இவ்வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறுதிக்குள் மின்சாரம் வழங்கப்படுமென எரிசக்தி மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். (more…)

இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இலங்கை அகதிகளில் 67 சதவீதமானோர், மீண்டும் இலங்கை திரும்புவதற்கு விருப்பமற்றுள்ளனர் தெரிவித்துள்ளனர் என அவர்கள் தொடர்பில் மெற்கொண்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்ததாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

யாழ்ப்பாணம், குருநகர் ஐந்து மாடிப் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவனை கடந்த 24ஆம் திகதி முதல் காணவில்லை என சிறுவனது பெற்றோர் திங்கட்கிழமை (27) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வடக்கு மாகாண சபை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான மாவை சேனாதிராசா கலந்து கொண்டுள்ளார். (more…)

வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட காணி சம்பந்தமான அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்யுமாறு கோரும் தீர்மானம் தொடர்பாக விரைவில் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு சமர்பிக்கப்படும் என ஜானதிபதி செயலளார் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts