Ad Widget

மூத்த பிரஜைகளுக்கு முச்சக்கரவண்டி

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு (தெல்லிப்பளை) மூத்த பிரஜைகள் குழுவினரின் போக்குவரத்து நலன்கருதி, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் முச்சக்கர வண்டியொன்று திங்கட்கிழமை (08) கையளிக்கப்பட்டுள்ளது.

15789610018_cb65659b55

மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.ஸ்ரீ.மோகனன் ஊடாக இந்த முச்சக்கர வண்டியை ஆளுநர் கையளித்தார்.

தங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கு வாகனம் ஒன்றை வழங்கும்படி மூத்த பிரஜைகள் விடுத்த கோரிக்கைக்கமைய இந்த முச்சக்கர வண்டியை வழங்குவதாக வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

Related Posts