Ad Widget

கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இளைஞர் மாநாடு

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண இளைஞர் மாநாடு இன்று புதன்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

வடபகுதி இளைஞர், யுவதிகளது பிரச்சினைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் நோக்காக் கொண்ட இந்த மாநாட்டிற்கு வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இருந்து 15௦௦க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சுதந்திர பயணம் -2014 இளைஞர் பிரகடனத்தினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் இளைஞர் சம்மேளன யாழ். மாவட்ட அமைப்பாளரினால் கையளிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த நிகழ்வை தடுக்கும் வகையில் தமக்கு இராணுவ, புலனாய்வு தரப்பினர் கடும் அழுத்தங்களைக் கொடுத்தனர் என்றும், எனினும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த நிகழ்வை நடத்தியுள்ளதாக அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ரவீந்திர டி சில்வா தெரிவித்தார்.

Related Posts