Ad Widget

யாழ்.பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் கவனயீர்ப்பு!

தமது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, யாழ்.பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் இன்று கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு, கல்விக்கான நிதி ஓதுக்கீட்டை அதிகரிப்பது உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்ச தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளர்களின் போராட்டம் காரணமாக பல்கலைக்கழங்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts