யுத்தத்தை நிறுத்தாவிடின் தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பர்

யுத்தத்தை அப்போது தான் நிறுத்தாமல்விட்டிருந்தால், இப்போதுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 'திவிநெகும' திணைக்களத்தின் 'செழிப்பான இல்லம்' எனும் செயற்றிட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பயனாளிகள் வீடுகளை திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, திக்கோடை கணேச வித்தியாலயத்தில் புதன்கிழமை...

சீனி லொறியுடன் கடத்தப்பட்ட தமிழர் கொலை

கொழும்பில் இருந்து 300 சீனி மூடைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த லொறியை இடைநடுவே கடத்துவதற்காக சாரதியும்,நடத்துநரும்,சீனி மூடைகளுக்கு பாதுகாப்புக்காக வந்த தமிழ் இளைஞரைக் காட்டுப் பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து புதைத்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் லொறியில் கொண்டு வந்த பொருள்களை அரைவிலைக்கு விற்றுக்காசாக்கியுள்ளனர். 19வயதுடைய மல்லாவி,வவுனிக்குளத்தைச் சேர்ந்த தி.துசாந்தன் என்ற இளைஞனே...
Ad Widget

வடக்கு முதலமைச்சரின் பொறுப்புக்கள் சில ஏனைய அமைச்சர்களுக்கு இரகசியமாக ஆளுநர் முன்னிலையில் பகிரப்பட்டன!

வடக்கு மாகாண முதலமைச்சரின் வசம் இருந்த சில அமைச்சின் கடமைகள், மேலதிக பொறுப்பக்கள் ஏனைய அமைச்சர்கள் மூவரிடம் மிக இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சுக்களின் பொறுப்புக்களை குறித்த மூன்று அமைச்சர்களும் பொறுப்போற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சரின் வசம் இருந்து, கூட்டுறவுதுறை, நீர் வழங்கல் -...

யாழ்ப்பாணத்தில் 5 உப ரயில் நிலையங்கள் இன்று முதல் இயக்கம்

தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 5 ரயில் நிலையங்கள் இன்று புதன்கிழமை தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளன. இதன்படி உப ரயில் நிலைய அதிபர்களாக நியமனம் செய்யப்பட்ட 5 உப நிலைய அதிபர்களிடம் நேற்று பதில் ரயில் நிலைய அதிபர் (பயணப் பிரிவு) மொகமட் இஸ்மாயில் ஹாரூம் பொறுப்புக்களைக் கையளித்தார். கடந்த எட்டாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும்...

நச்சுநீர் தாக்கியதில் மீனவர்கள் பாதிப்பு

வடமராட்சி கிழக்கு, கற்கோவளம் கடற்பகுதியில் நச்சுநீர் (ஜெல்லி மீன் போன்ற நச்சு உயிரினம்) தாக்கியதில் மீனவர்கள் மூவர் பாதிக்கப்பட்ட நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) அனுமதிக்கப்பட்டனர். கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்த நச்சுநீர் தாக்கியதில் ஒவ்வாமை, சோர்வு மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன....

மல்லாகத்தில் 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு

யாழ். மல்லாகம் காட்டுத்தரை (ஜே - 213) கிராமத்திலுள்ள 15 கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் இன்று புதன்கிழமை (10) தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் எஸ்.நந்தகுமார் மேலும் தெரிவிக்கையில், இதுபற்றி பாதிக்கப்பட்ட மக்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருடன் சென்று கிணறுகளை பார்வையிட்டு நீர்...

கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இளைஞர் மாநாடு

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண இளைஞர் மாநாடு இன்று புதன்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. வடபகுதி இளைஞர், யுவதிகளது பிரச்சினைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் நோக்காக் கொண்ட இந்த மாநாட்டிற்கு வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இருந்து 15௦௦க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சுதந்திர பயணம் -2014...

யாழில் 450,132 பேர் வாக்களிக்கத் தகுதி – அரச அதிபர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 450,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். நாடுபூராகவும் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில் அரச அதிபர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தை பொறுத்த வரையில் 450,132 வாக்காளர்கள் தேர்தலிலே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதோடு இதற்காக...

வட பகுதி ரயில் சேவை ஸ்தம்பிதம்: இரண்டு யானைகள் மோதி பலி

ரயில் தண்டம்புரண்டதன் காரணமாக வட பகுதிக்கான ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று (09) இரவு 11.20 மணியளவில் யாழ், நோக்கிச் சென்ற ரயிலில் அம்பன்பொல மற்றும் கல்கமுவ இடையே யானைகள் இரண்டு மோதியதில் ரயில் தடம்புரண்டுள்ளது. இதன்போது இரண்டு யானைகளும் உயிரிழந்துள்ள நிலையில்...

எமது மக்களின் அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் த.தே.கூட்டமைப்பே காரணம் – டக்ளஸ்

எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் (09) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு...

நகைகளைப் பெற்ற வடக்கு மக்களால் தமக்கு 10 கோடி ரூபா நட்டமாம்! – ரயில்வே ஊழியர் சங்கம்!!

யுத்த காலத்தில் வடபகுதி மக்களால் விடுதலைப்புலிகளின் தமிழீழ வைப்பகத்தில் அடகு வைக்கப்பட்ட தங்க ஆபரணங்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீள ஒப்படைப்பதற்காக வட பகுதியிலிருந்து கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு இலவச ரயில் சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை ரயில்வே திணைக்களத் துக்கு சுமார் பத்து கோடி ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இலங்கை ரயில்வே...

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவு

எதிர்வரும், ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முற்போக்கு தமிழ் தேசிய கட்சி ஆதரவு வழங்குவதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் சுதர்சிங் விஐயகாந் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

மன்னாரில் பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் 5,000 ஹெக்டேயர் அபகரிப்பு

பறவைகள் சரணாலயம் என்ற போர்வையில் மன்னாரில் 5 ஆயிரம் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக செய்யப்படுவதாகவும் அந்நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும்; யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஏ.சூசையானந்தன், திங்கட்கிழமை (08) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலங்களிலும் அதற்கு பிற்பட்ட காலப் பகுதிகளிலும் மன்னார் மாவட்டத்தில் இலங்கை அரசினால்...

சர்வதேச மனித உரிமைகள் தின ஒன்றுகூடலுக்கு த.தே.ம.மு அழைப்பு

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காக கிளிநொச்சியில் புதன்கிழமை இடம்பெறவிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் தின ஒன்றுகூடலில் செம்மஞ்சள் நிற ஆடைகளுடன் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில், அக்கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திர விடுத்துள்ள ஊடக...

அளவெட்டி கிணற்றிலும் எண்ணெய் கசிவு

சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தற்போது அளவெட்டிக்கும் பரவியுள்ளது. அளவெட்டி மேற்கில் ஜே - 218 கிராம அலுவலர் பிரிவிலுள்ள கிணறு ஒன்றிலும் எண்ணெய் கசிந்துள்ளதாக வீட்டு உரிமையாளர், கிராமஅலுவலர் ஊடாக பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய், வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால்...

வாசுவும் பல்டி…?

தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பதா இல்லையா என்று, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இன்று புதன்கிழமை(10) முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய அரசியல் சூழ்நிலையையடுத்து, அவர் இந்த முக்கிய தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் அரசாங்கத்தில் இருப்பாரா அல்லது வெளியேறுவாரா என்பது தொடர்பில் இன்று...

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன மக்களுக்கான எமது பணி தொடரும் – முதலமைச்சர்

நாங்கள் மக்கள் நலன் கருதியே அரசியலில் உள்நுழைந்துள்ளோம். எமக்கு எமது மக்கள் நலமே முக்கியம். அவர்களின் விடிவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அவர்களின் சுதந்திரமும் சுபீட்சமும் எமது தாரக மந்திரங்களாகத் தொனிக்கட்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது....

இன்னும் முடிவெடுக்கவில்லை, மாவை சேனாதிராசா தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னர் அது குறித்து தீர்மானிக்கப்படும்.தேர்தல் தொடர்பாக கிராமம் கிராமமாக சென்று மக்களின் கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். எவ்வாறெனினும், இன்று...

இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்!

இன்று (09) சர்வதேச ஊழல் எதிர்ப்புத் தினமாகும்.கடந்த 2004 ஆம் ஆண்டு ஐ.நா பொதுக்கூட்டத்தின் போது டிசம்பர் 9ஆம் திகதி ஊழல் எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு ஊழல் எதிர்ப்புத் தினமானது 'ஊழல் சங்கிலியை உடைப்போம்' என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்க ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் அலுவலகம் தீர்மானித்துள்ளது. ஊழல் தொடர்பான விழிப்புணர்வு வகிபங்கு...

யாழ்.பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் கவனயீர்ப்பு!

தமது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதன்படி, யாழ்.பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் இன்று கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளம், மேலதிகக் கொடுப்பனவு, கல்விக்கான நிதி ஓதுக்கீட்டை அதிகரிப்பது உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்கல்வி அமைச்ச தவறிவிட்டது என்று குற்றம்...
Loading posts...

All posts loaded

No more posts