Ad Widget

நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் ஆரம்பம்

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசேட விவாதம் கைதடியிலுள்ள வடமாகாண சபையில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

இன்று ஆளுநர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டு முன்மொழிவு பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தற்போது முதலமைச்சர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் இடம்பெறுகிறது.

நாளை சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடு, செலவீனங்கள் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன.

நாளை மறுதினம் விவசாயம் , மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

Related Posts