Ad Widget

ஐந்து சந்தி குழு மோதல் ; மூவர் கைது

ஐந்து சந்தி பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழு மோதலின் போது, ஐந்து சந்தியில் அமைந்துள்ள பீடா கடை, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன், வாள்வெட்டுக்கு இலக்கான மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், கொட்டடி, ஆறுகால்மடம், நாவாந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் 8 சந்தேகநபர்கள் தொடர்புபட்டிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஏனைய ஐவரையும் தேடி வருவதாகவும் யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்தனர்.

Related Posts