Ad Widget

த.தே.கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை அறிவித்தால்!! வடக்கில் மஹிந்தவின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்!

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால், வடக்கில் மஹிந்த அரசின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து அங்கு மக்கள் நிம்மதியாக உண்டு, உறங்க முடியாத அபாய நிலை ஏற்படும்.” இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

chandrika_bandaranayake

எனக்கு மனநோய் இல்லை. அந்த நோய் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இரண்டாவது பதவிக் காலத்துடன் ஆட்சியைக் கைவிட்டு வீட்டுக்கு வந்தேன். ஆனால், அந்த நோய் இப்போது வேறொருவருக்கு வந்துள்ளது. இதற்கு மருந்தில்லை.

யுத்த வெற்றியின் 75 வீத உரிமை எனக்கு உரியது. 25 வீதமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்குரியது என்றும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் அவர் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.

Related Posts