- Saturday
- July 5th, 2025

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்கு அருகில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்ததாகவும் அவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று...

கர்ப்பிணிப் பெண்கள் பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு பரிசிடமோல் மருந்துகளை பயன்படுத்தும் தாய்மார்களால் பிரசுவிக்கப்படும் குழந்தைகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளமையே இதற்குக் காரணம் என, வைத்தியர் ரத்னசிறி ஹேவாகே குறிப்பிட்டுள்ளார். நோர்வே - ஒஸ்லோ பல்கலைக்கழகம் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. 48,000 தாய்மார்களிடம்...

கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது அதாவது 26ஆம் திகதி சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைக்கவுள்ளார். அன்று காலை 11 மணிக்கு மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக்கூடத்தை திறந்துவைக்கவுள்ளதுடன்...

திருகோணமலையில் கடற்படையின் கட்டுப்பாட்டில் எவரும் தற்போது இல்லை என்று கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். திருகோணமலையில் 'கோட்டா' தடுப்பு முகாமில் 700 பேர் வரையிலும், திருகோணமலை கடற்படைத்தளத்தில் 35 குடும்பங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பில் புதிய அரசு உடன் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழலாம். ஆனால் ஓர் இலங்கைக்குள் வாழ இயலாது. ஏன் என்றால் சிங்கள் தேசம், தமிழ் தேசம் என்று இந்த நாட்டில் இரண்டு தேசங்கள் காணப்படுகின்றன என யாழ். பல்கலைக்கழக பேராசிரியரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவருமான ஆ.இராசகுமாரன், ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார். மாற்றம் அமைப்பின் ஏற்பாட்டிலான இளைஞர் மாநாடு யாழிலுள்ள விருந்தினர் விடுதியில்...

இலங்கை சுதந்திரம் பெற்றுவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொண்டு வந்தாலும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையென மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின், 'ஜெனீவாத் தீர்மானமும் மெய்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு' என்றும் நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை...

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் அல்லைப்பிட்டி ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொன்னையா சிவலிங்கம் (வயது 55) என்பவர் உயிரிழந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இதன்போது, இருவருக்கும்...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை அவரது தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தினார். இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் இதனையடுத்தே முன்னாள் ஜனாதிபதிக்கு...

இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்திருக்கிறார். இரண்டு கிழமைகளுக்கு முன்னரே தமக்கு இந்த தகவல் தெரியவந்ததாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த ராயப்பு ஜோசப், இலங்கை போரின்...

இலங்கையில் வடக்கிலிருந்து 1990-ம் ஆண்டில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட சம்பவம் இனச்சுத்திகரிப்பு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே என்று சர்வதேசத்தின் ஆதரவுடன் போர்க்குற்ற விசாரணைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகின்ற பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை வெளியாகியுள்ளது....

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் நாச்சிக்குடாவில் இடம்பெற்றது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது யாழ்....

ஊர்காவற்றுறை நாரந்தனைப் வடக்குப் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது 19) யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். நேற்று முற்பகல் 11மணியளவில் கல்வி நிலையத்திற்குச் செல்வதாக கூறி வீட்டில்...

ஏற்கனவே திட்டமிட்டபடி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழகச் சமூகம் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கவுள்ளது என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா அறிவித்துள்ளார். இந்தப் பேரணியில் அனைவரையும் அணி திரண்டு ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட...

ஐ.நா விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிடுமாறு வலியுறுத்தி நாளைமறுதினம் இடம்பெறும் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் விடுத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இறுதிப் போரிலே எம் இனத்தின் மீது இலங்கை அரசு அதன் இராணுவ இயந்திரத்தைக் கொண்டு ஈவிரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட மனிதப் பேரவலங்களுக்கு ஆறு...

காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் - TNA காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி நேற்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? உலகே உனக்கு...

எமது மக்களுக்காக அரசியல் துணிச்சலோடு எமது இணக்க அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தோம். நாம் நீண்ட காலமாகவே வலியுறுத்தி வந்த எமது அரசியல் வழிமுறை நோக்கி காலம் கடந்தாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வந்திருப்பதை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார். அவர்...

செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோருவோர் வடமாகாண சபை உறுப்பினர்களை தொடர்பு கொண்டு தமது கோரிக்கைகளை அவர்கள் ஊடாக சமர்ப்பிக்குமாறு வடமாகாண சபை உதவிச் செயலாளர் பா.ஜெயகரன் சனிக்கிழமை (21) அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்றிட்டங்களுக்கு வடமாகாண சபையிடம் நிதியுதவி கோரும் விண்ணப்பங்கள் பல பேரவைச் செயலகத்துக்கும் அவைத்தலைவருக்கும் அனுப்பப்படுகின்றன. எனினும் பிரமாண அடிப்படையிலான...

காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு மேலும் 6 மாதங்களுக்கு கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவம் வெளியேற வேண்டும்,...

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு அவரின் மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது மகாதேவா ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிக்கா, தனது தாய் கைது செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.

இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் கடந்த அரசாங்கத்தால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை நிறுத்த தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் வௌிநாட்டு ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தால், குறிப்பாக கடந்த ஆட்சிக்காலத்தின் கடைசி சில மாதங்களில் பெருந்தொகை பணம் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....

All posts loaded
No more posts