பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வந்து சாட்சியமளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற பின் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.
இவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அவரை கைது செய்யுமாறு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ நேற்றைய தினம் நாடு திரும்பியிருந்தார்.
இவ்வாறு நாடு திரும்பியதும் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரணைக்கு தேவையான சகல ஆதரவினையும் அனைத்து தரப்பினருக்கும் வழங்கப் போவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.