சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு

காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கை குறித்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரியும் யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. தொடர்ந்து பேரணியாகச் சென்றவர்கள் ஆஸ்பத்திரி வீதியூடாக காங்கேசன்துறை...

தவறு செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – டக்ளஸ்

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது பாரபட்சமின்றி விசாரணைகள் நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை பின்போடுவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
Ad Widget

பாலச்சந்திரனின் மரணம்: தமக்கு எதுவும் தெரியாதாம்! புலிகளே கொன்றிருக்கலாமாம்!! – பொன்சேகா

சர்வதேச ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன் தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும்...

 விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டமை கவலையளிக்கிறது

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையை வெளியிடும் திகதி ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்மானம் எம்மை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது என தமிழ் சிவில் சமூகம் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையயில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இத்தீர்மானம்,...

சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வெள்ளிக்கிழமை (20) ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தொண்டர்கள் கடந்த 4 தினங்களாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வரும் நிலையில் வெள்ளிக்கிழமை (20) ஆளுநர் செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆளுநருக்கு...

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு

சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதியான முறையில் பேரணியில் ஒன்று திரளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் யாழ். மாவட்ட தலைவரும் வடமாகாணசபை உறுப்பினருமான சந்திரலிங்கம் சுகிர்தன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (20) ஊடகங்களுக்கு அவர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அவருடைய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) காலை...

பாதுகாப்பற்ற கடவைகள் தொடர்பில் கவனம் செலுத்துக – வணிகர் கழகம்

யாழ்.நகரப்பகுதிகளில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் உடனடியாக கவனத்தில் எடுத்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரை யாழ்.வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பில் யாழ். வணிகர் கழகம் ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ரயில் பயணத்துடன் யாழ்.குடாநாட்டு மக்கள் நீண்ட பரீட்சயம் அற்றவர்கள். இரண்டு தசாப்தங்களின்...

காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா? யாழில் போராட்டம்

காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி இன்று காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது. யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள் “காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?“ “உலகே உனக்கு கண்ணில்லையா?“ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்தப் போராட்டத்தில் வடமாகாண...

விரைந்து செயற்பட்டது தீயணைப்புப் பிரிவு! நூற்றாண்டுகள் பழமையான மரம் தப்பியது!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் விரைவான செயற்பாட்டால் நூற்றாண்டுகள் பெறுமதியான மரம் காப்பற்றப்பட்டது. அத்துடன் அயலில் இருந்த வீடுகளுக்கு ஏற்படவிருந்த பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை 4 மணியளவில் நல்லூர் கற்பகப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இருந்த மகோகனி மரமே எரியுண்டது. மரத்துக்கு அண்மையாக குப்பைகளைப் போட்ட சிலர் அதை எரியூட்டி சென்றனர்...

தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அறியும் ஆவல் வன்னி மக்களிடம் இப்போதும் உள்ளது!

வன்னியில் தற்போதுள்ள மக்கள் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்குமான தேவை அதிகமாகக் காணப்படுகின்றது என சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்று திரும்பிய பிரிட்டனின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் லாரா டேவிஸ் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இணையப் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

சுகாதாரத் தொழிலாளர்களுக்கான விடுதி நிர்மாணிக்க அடிக்கல் நாட்டு விழா

சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரத்தொழிலாளர்களுக்காக விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (20) காலை உதயசூரியன் குடியிருப்புப்பகுதியில் சாவகச்சேரி நகராட்சி மன்ற தவிசாளர் தேவசகாயம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது. அதிபர் க.அருந்தவபாலன் பிரதம விருந்தினராக கலந்த கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதன் முதற்கட்டமாக 5 விடுதிகள் 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில்...

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டக்கூடாது – எமிலியாம்பிள்ளை

இலங்கை கடல் எல்லையைத் தாண்டி தமிழக மீனவர்கள் வருவதைத் தடுப்பதற்கு எமது ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட கடல்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் சு.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். கடற்தொழிலாளர் சங்கத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழக மீனவரின் இழுவைப்படகுகளால் எமது...

சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்குக்கான ஆய்வுகட்டுரைகளை உலகெங்கிருந்தும் கோரும் யாழ் பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினால் இவ்வாண்டும் 'அறிவு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக உற்பத்தி திறனை மேம்படுத்தல்' என்னும் தொனிப்பொருளிலான சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆய்வரங்கிற்கான ஆக்கங்கள் யாழ் பல்கலைக்கழகத்தினால் கோரப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் முகாமைத்துவ...

புதிய இராணுவத் தளபதியாக கிரிசாந்த டி சில்வா நியமனம்!

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் புதிய இராணுவத் தளபதியாக கிரிசாந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 21ஆவது தளபதியாக இவர் நியமனம் பெறுகிறார். இதுவரை இராணுவத் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு பதிலாக இவர் நியமனம்...

ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (20) காலை முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக செல்லும் வீதியில் வியாழக்கிழமை (19) மாலை கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோதியதில் கோப்பாய் பகுதியை சேர்ந்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்...

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படாமை வருத்தமளிக்குறது – சுரேஸ் எம்.பி

இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், போர்...

மாவீரர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதார செயற்றிட்டம் ஆரம்பம்

மாவீரர் குடும்பங்கள்,முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டமானது வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் வரவு -செலவுத்திட்ட அமர்வின் போது அமைச்சர் டெனீஸ்வரனால் குறித்த கொள்கைத் திட்டம்...

பொருள்களின் விலைக்குறைப்பு விவரம் வர்த்தமானியில்!

புதிய அரசின் இடைக்கால வரவு - செலவு திட்டத்தில் விலை குறைப்பு செய்யப்பட்ட சிமெந்து உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வர்த்தமானியில் பிரசுரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நேற்று (19) நள்ளிரவு இந்த அறிவித்தல்கள் அனைத்தும் இன்றைய வர்த்தமானியில் உள்ளடங்கும் வகையில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து விலை குறைப்பு செய்யப்பட்ட...

போர்க்குற்ற அறிக்கையை வலுப்படுத்த ஐ.நா. மனிதஉரிமைகள் உப மாநாடுகளில் பங்குபற்ற கூட்டமைப்பு முடிவு!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணை அறிக்கையை மார்ச் மாத ஜெனிவா அமர்வில் சமர்ப்பிக்காமல் செப்டெம்பர் மாத அமர்வு வரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் - ஹுசைன் ஒத்திவைத்துள்ள நிலையில், அதனை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. அடுத்த மாதம்...

கோட்டா முகாமில் 700 இற்கும் மேற்பட்டோர் தடுத்துவைப்பு! உடனடி விசாரணை தேவை – கூட்டமைப்பு

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையிலுள்ள கோட்டா முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில் 700இற்கும் மேற்பட்டோர் தடுத்துவைக்கப் பட்டுள்ளனர் என்ற தகவலை நாடாளுமன்றில் வெளியிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்தக் 'கோட்டா' முகாம் தொடர்பில் உடனடி விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டுமெனவும் கூட்டமைப்பு வலியுறுத்தியது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோர், சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்புத் தொடர்பான...
Loading posts...

All posts loaded

No more posts