Ad Widget

ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி சந்திப்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இலங்கை வந்தைடைந்த இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இனறு காலை இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது மீனவர்கள் பிரச்சினை, ஈழத் தமிழர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை இன்று பிற்பகல் 3.15 மணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

கடந்த 1987ஆம் ஆண்டு, அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தார். அதன்பின்னர் குறிப்பாக 28 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு வந்த இந்திய பிரதமராக நரேந்திர மோடி பெருமை சேர்த்துள்ளார்.

Related Posts