Ad Widget

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களை லண்டனில் சந்தித்தார் ஜனாதிபதி

யாழ் இந்துக் கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

jhc-oba-london-my3

லண்டனில் உள்ள பழைய மாணவர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கு பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கப்பட்டது.

பிரித்தானியாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி பிரித்தானியாவின் பல அரசியல் உயரதிகாரிகளை சந்தித்திருந்த நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பை ஞாபகப்படுத்தும் வகையிலான நினைவுச்சின்னமொன்றினை இந்துக் கல்லூரி மாணவர்கள் வழங்கி ஜனாதிபதியை கௌரவித்தனர்.

Related Posts