Ad Widget

அரசியல் கைதிக​ள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை

100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான எந்த பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கவில்லை. ஏதோ முதல் 220 ஏக்கர் காணியினை விடுவித்து விட்டு, தற்போது, முழமையாக 1000 ஏக்கர் காணியினை விடுவித்துள்ளார்கள்.

அந்தவகையில் பார்க்கப் போனால், இனப் பிரச்சினைத் தீர்வு 65 ஆண்டுகள் கடந்த நிலைமை கேள்விக்குறியாக இருக்கின்றது.

அன்னப் பறவை என்பது ஒரு இதிகாச பறவை, தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அன்னப் பறவை பாலையும், தண்ணியையும் வேறாக்குவது போன்று, சிங்கள மக்களுக்கு மட்டுமே தனது சேவையினை செய்கின்றது, என்றார்.

Related Posts