தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதியிடம் மனுக் கையளிப்பு!

யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கோரி மனு ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் நேரடியாகச் சமர்ப்பித்தனர். யாழ். அரச செயலகத்துக்கு சென்று இந்த மனுவை அவர்கள் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர். தாதிய பயிற்சி நெறியை பூர்த்தி செய்து இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள நேரத்தில் தங்களிடம் ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி கோரப்பட்டு,...

தென்னிலங்கை அரசியல்வாதிகளை தமிழ் மக்கள் நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றனர் – டக்ளஸ்

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்த்த காலம் மாற்றமடைந்து, நேசக்கரம் நீட்டி தமிழ் மக்கள் வரவேற்கும் காலம் தற்போது நடைபெறுகின்றது. அந்த மாற்றத்துக்கு முக்கிய பங்காளிகளாக நாங்கள் இருந்துள்ளோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடமாகாண விசேட அபிவிருத்திக்குழுக்கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை...
Ad Widget

மஹிந்தவின் விடுதியையும் மைத்திரி பார்வையிட்டார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, காங்கேசன்துறையில் கட்டிய ஜனாதிபதி விடுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, செவ்வாய்க்கிழமை (03) பார்வையிட்டார். ஜனாதிபதியாக பதிவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரன் ஆகியோருடன் சென்று பார்வையிட்டார். விடுதி தொடர்பில் கடற்படையினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள பிஸ்சி ஒழுங்கையில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை இன்று (4) மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி ஒழுங்கையில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர். வவுனியா, வைரவபுளியங்குளம் பிரதேசத்தில் உணவகமொன்றை நடத்திவருபவரான வடிவேலழகன் (வயது 45) என இவர்...

தாயைப் பார்க்க இலங்கை வந்த பகீரதி தடுப்புக்காவலில்

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 15 ஆண்டுகளுக்கு முன்னர் விலகியிருந்த முருகேசு பகீரதி என்ற தாய் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றார். 2005-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே நேற்று முன்தினம் திங்கட்கிழமை...

ஐந்தாம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு ஒருவேளை உணவு வழங்க நடவடிக்கை

முதலாம் ஆண்டு தொடக்கம் ஐந்தாம் ஆண்டு வரையான பாடசாலை மாணவர்களுக்கு ஒரு நேர உணவு பெற்றுக் கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன இன்று (03) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை...

த.தே.கூ., அமைச்சுகளை பொறுப்பேற்றது

கிழக்கு மாகாண சபையில் புதிய அமைச்சுப் பொறுப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வில் புதிய அமைச்சர்களாக நால்வர் பதவியேற்றுக் கொண்டனர். கிழக்கு மாகாண கல்வியமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபானியும், சுகாதார அமைச்சராக ஸ்ரீ ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்...

வடக்கு, கிழக்கு,தெற்கு மக்களை உள்ளங்களால் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுப்பேன்- ஜனாதிபதி

இங்குள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நான் அறிவேன். அதனைத் தீர்க்கும் அவசியம் எனக்கு உள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்...

எமது வரலாற்றை மறந்துவிடக்கூடாது – குருகுலராஜா

எமது தமிழ் சமூகத்தில் முன்னைய வரலாறுகளை தற்போதுள்ள புதிய தலைமுறையினர் மறந்து வருகின்றனர். அவ்வாறு இல்லாமல் புதிய தலைமுறையினர் எமது பழைய வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கவேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். உலக வங்கியின் 13 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் துணுக்காய் வலயக்கல்வி பணிமனையில் அமைக்கப்பட்ட கட்டடத்தை திங்கட்கிழமை (02) திறந்து...

எரிந்த நிலையில் கர்ப்பிணி மீட்பு

அல்வாய் முத்துமாரியம்மன் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் திங்கட்கிழமை (02) காலை மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். வதிரியைச் சேர்ந்த பிரதீபன் சரண்யா (வயது 24) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டார். இவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றார். இருவரும் வதிரியிலிருந்து அல்வாய் பகுதியிலுள்ள...

‘விடுதலைப்புலிகள் மீதான தடையை இலங்கை, இந்திய அரசுகள் நீக்கவேண்டும்’

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது போன்று, இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படுவதன் மூலமே தமிழ்மக்களின் அடிப்படை பிரச்சினைகள் உட்பட அனைத்து விதமான பிரச்சினைககளையும் சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியும் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார்....

காணாமற்போனவர்களின் உறவினர்கள் நாளை யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து நாளை புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை யாழ். அரச செயலகம் முன்பாக நடத்தவுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியிடம் மனு ஒன்றையும் தாம் கையளிக்கவுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களையும், காணாமற் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அனைவரையும் பங்கேற்குமாறும் குறித்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை வடபகுதியில் இச்சங்கத்தினால்...

வடக்கின் அபிவிருத்திக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் – மாவை

மக்களுடைய நிலங்களை விடுத்து கடல் பகுதியை அபிவிருத்தி செய்து பலாலியில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பனவற்றை அபிவிருத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடக்கு மாகாண ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன...

யாழில் மைத்திரிபாலவை வரவேற்றார் முதலமைச்சர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30. மணியளவில் யாழ் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. யாழிற்கு வருகை தந்துள்ள புதிய ஐனாதிபதியை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாலை அணிவித்து வரவேற்றார். இதன் போது மத்திய அரசின் அமைச்சர்கள் சிலரும் வருகை தந்திருந்தனர். இந்தக்...

ஆயுதக் குழுவின் அட்டகாசங்களால் கெருடாவில் மக்கள் இரவில் நடமாட அச்சம்!

சாவகச்சேரி கெருடாவிலில் கொட்டன்கள் மற்றும் ஆயுதங்களுடன் நடமாடும் குழுவினரால் மக்கள் இரவில் நடமாட மக்கள் அஞ்சுகின்றனர். இந்தக் குழுவினர் இரவில் நடமாடுவோரை வழிமறித்து இடையூறு விளைவிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவில் நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. தவிர மட்டுவில், சரசாலை பகுதிகளைச் சேர்ந்த சாவகச்சேரி நகர்ப் பகுதி வர்த்தகர்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு...

மீசாலையில் தீ விபத்து! மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு!!

மீசாலை சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் திடீரென தீப்பற்றி எரிந்நதால் கடையிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது. வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகின. அத்துடன் வர்த்தக நிலையத்தின் மேலாகச் சென்ற மின்...

காணாமற்போனவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைது

கடந்த 25ஆம் திகதி முதல் காணாமற்போனதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த யாழ்.மாலுசந்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் மயூரன் (வயது 21) என்ற இளைஞனை திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இளைஞனைக் காணவில்லையென அவரது தாயார் கடந்த 26ஆம் திகதி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். குளிர்பான நிலையமொன்றுக்கு...

இணைந்து ஆட்சி அமைக்க வருமாறு த.தே.கூட்டமைப்புக்கு அழைப்பு

கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள 10 உறுப்பினர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்புக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்த 10 உறுப்பினர்களே இந்த அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கின்றது புதிய ஜனநாயக மார்ச்சிச லெனினிசக் கட்சி

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிப் புகுந்த இந்திய மீனவர்கள், இலங்கைத் தமிழ் மீனவர்களை ஆயுதங்களால் தாக்கிப் படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். இதனைக் கண்டித்து புதிய ஜனநாயக மார்ச்சிச லெனினிசக் கட்சி (NDMLP) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை: நேற்று முன்தினம் (27-02-2015) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நூற்றுக் கணக்கான இழுவைப் படகுகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறிப்...

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

பாரம் தூக்கி மூலம் சீமெந்துத் தூணை தூக்கி நட முயன்ற வேளையில் மின்சாரம் தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தெல்லிப்பழை, கொல்லங்கலட்டிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றது. மூன்று பிள்ளைகளின் தந்தையான சங்கானை, சிலம்பு புளியடியைச் சேர்ந்த தங்கமுத்து சோதிநாதன்(வயது-34) என்பவரே உயிரிழந்தார். கொல்லங்கலட்டிப் பகுதியில் வீதிக்கு...
Loading posts...

All posts loaded

No more posts