Ad Widget

யாழ்.மாவட்ட அரச அதிபராகிறார் வேதநாயகன்

யாழ்.மாவட்ட அரச அதிபராக இடமாற்றம் பெற்றுள்ள, முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்டத்தில் தனது கடமைகளை எதிர்வரும் 23ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதற்குப் பதிலாக யாழ்.மாவட்ட அரச அதிபராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக கடமையாற்றிய திருமதி ரூபவதி கேதீஸ்வரன்,முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 13ஆம் திகதியிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்,பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சில வேலைத்திட்டங்களை உரிய முறையில் கையளிக்க வேண்டியிருப்பதால் அடுத்த வாரம் பதவியேற்புகள் இடம்பெறவுள்ளன.என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts