Ad Widget

முதலமைச்சர், ஆளுநரின் வாகனங்களும் சோதனை

வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ் பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே யாழ். பொதுநூலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை (14) விஜயம் மேற்கொண்டு யாழ். பொதுநூலகத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து, இந்திய நிதியுதவியில் முற்றவெளியில் கலாச்சார மண்டபம் கட்டுவதற்கான திரைநீக்கமும் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பொதுநூலகத்துக்கு வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரின் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே பொதுநூலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன. இந்திய பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரே வாகனங்களை சோதனை செய்தனர். இதேவேளை, அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

Related Posts