Ad Widget

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரானார் ஜனாதிபதி மைத்திரி!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகத் தெரிவானார்.

maithripala-sirisena

முன்னாள் காணி அமைச்சரான ஜானக பண்டார தென்னக்கோன் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக சுசில் பிரேமஜயந்த நீடிக்கும் அதே சமயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அனுர பிரியதர்ஷன யாப்பா காப்பாளராக நியமிக்கப்பட்டார்.

Related Posts